ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 241 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம் என்று விமர்சித்துள்ளார். 2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து கொண்டது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 241 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் […]
Continue reading …இன்று ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் அவர்களுக்கு மனித வள மேம்பாட்டு துறை, தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது.
Continue reading …வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டும் புதுச்சேரியில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பழைய மின் கட்டணமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் புதுச்சேரி மாநில மின்துறையின் வரவு செலவு கணக்குகள் கோவாவில் உள்ள இணை ஒழுங்கு முறை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு அதற்கேற்ப மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் 2023-24 நிதியாண்டுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க அப்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் கொடுத்தார். மின்கட்டண உயர்வு தொடர்பாக […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அமித்ஷா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆந்திராவிலிருந்து சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் இது குறித்து விளக்கமளித்த போது, […]
Continue reading …நேற்று குவைத்தில் நடந்த தீ விபத்தில் 41 பேர் பலியாகி உள்ளனர். இதில் பலரும் இந்தியர்கள் என்று கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. மத்திய அமைச்சர் குவைத் விரைவதாகும் அங்கு மீட்பு பணியை அவர் பார்வையிட போவதாகவும் கூறப்படுகிறது. குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இந்தியர்கள் உட்பட 41 பேர் பலியாகினார். தூங்கிக் கொண்டிருக்கும் போது புகையை சுவாசித்ததால் இறந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் […]
Continue reading …40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியாகி உள்ளனர். புதன்கிழமை அதிகாலை குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்தில் தமிழர்கள் ஏழு […]
Continue reading …வானிலை ஆய்வு மையம் குமரி கடலில் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. மன்னர் வளைகுடா, குமரி கடல் மற்றும் தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளிலும், வடக்கு அந்தமான் […]
Continue reading …அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் “அதிமுக இடத்தை வருங்காலத்தில் பாஜக பிடிக்கும். பாஜக உள்ளே நுழையக்கூடாது என்று கூறும் கட்சிகள் இதை கவனித்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரசாந்த் கிஷோ “பாஜக தென்னிந்தியாவில் வேகமாக வளரும் என்று நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறினேன், அதுதான் தற்போது நடந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது, ஒரிசாவிலும் வளர்ந்துள்ளது, கேரளாவின் ஒரு எம்பி பெரும் அளவுக்கு பாஜக […]
Continue reading …நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் தாக்கல் செய்துள்ளார். நடிகர் தனுஷின் போயஸ் தோட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு அஜய் என்பவர் வீட்டில் வாடகைக்கு இருந்தார். அந்த வீட்டை தனுஷ் வாங்கியிருப்பதாகவும் உடனடியாக அந்த வீட்டிடை காலி செய்ய வேண்டும் என்றும் தனுஷ் தரப்பினர் கூறியுள்ளனர். இதையடுத்து அஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 2024ம் ஆண்டு ஜனவரி வரை தங்களுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் இருப்பதாகவும் எனவே தனுஷ் காலி செய்ய சொல்ல உரிமை […]
Continue reading …பழம்பெரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியுமான, பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் மட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். நடிகர் பிரேம்ஜிக்கு 40 வயதாகியும் சிங்கிளாக இருந்து வந்தவருக்கு எப்போதுதான் திருமணம் நடக்கும் என அவரது ரசிகர்களும் சினிமா உலகினரும் கங்கை அமரன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவருக்கு சில தினங்களுக்கு முன்பு திருத்தணி […]
Continue reading …