
மத்திய அரசு இந்த நிதி ஆண்டுக்குள் இருபத்தி ஏழு வந்தே பாரத் ரயில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே இரண்டு வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு இயங்கி வருகிறது என்பது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூர் வரை இயங்க உள்ளது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் மொத்தம் இருபத்தி ஏழு வந்தே பாரத் தயாரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் உள்ள ஆலையில் தான் […]
Continue reading …
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் காலில் குண்டு பாய்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்ரான்கான் அரசை எதிர்த்து சமீபத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிடவும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானில் ஆளும் அரசை எதிர்த்து நீண்ட பேரணி நடந்தது. இந்த பேரணியில் இம்ரான்கான் கலந்து கொண்ட நிலையில் திடீரென மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான்கான் கட்சி நிர்வாகிகள் சிலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் […]
Continue reading …ரசிகர்கள் “அவதார் 2” திரைப்படத்தின் அப்டேட்டுகள் குறித்து பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் அத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெயிலர் தற்போது ரிலீசாகியுள்ளது. “அவதார்” படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட்டின் லுக் உள்ளிட்டோர் நடிப்பில், தோராயமாக 250 மில்லியன் டாலர் செலவில் உருவாகியுள்ள இப்படம், 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகுமென கூறப்படுகிறது. […]
Continue reading …
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், மாதவன், ஷாருக்கான் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது மலையாள நடிகர் மம்முட்டியுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி மற்றும் மம்முட்டி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கவுள்ள திரைப்படத்தை மணிகண்டன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே “காக்காமுட்டை” உட்பட படங்களை இயக்கியவர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத […]
Continue reading …
இன்று திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குப் பயிற்சி எடுத்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜ் சாலையில் தனியார் நீட் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு திருப்பூரை அடுத்த படியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனின் மகள் ஆனந்தி பயிற்சி எடுத்து வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் ஆனந்தி பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார், அவரைக் காண்பதற்கு அவரது காதலர் வந்துள்ளார். […]
Continue reading …
இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த மம்தா பானர்ஜி சந்தித்த நிலையில் தேசியளவில் மாற்றம் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்குமென்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளரிடம், “இது ஒரு மரியாதை […]
Continue reading …
90 நாட்கள் வரை இருக்கும் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாக தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடிய டிலைட் என்ற […]
Continue reading …
நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரே வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்ததோடு அல்லாமல் ரசிகர்களின் மத்தியில் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது விரைவில் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணக்கப் போகிறார். சோஹைல் கதூரியா நீண்ட நாட்களாக […]
Continue reading …
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சமீபத்தில் வெளிவந்த “பிரின்ஸ்” திரைப்படம் பிரபல ஓடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு கடந்த 21ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் படம் ஒரு வாரத்துக்குள்ளாகவே பெரும்பாலான திரைகளிலிருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை வாங்கிய அன்புச்செழியனுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்றால் தெலுங்கிலும் இப்படம் சுத்தமாக […]
Continue reading …
பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இன்று பிறந்த நாளாக ரசிகர்கள் கொண்டாடினர். அதோடு மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் “பதான்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில், உருவாகிக் கொண்டிருக்கும் புதிய படம் “பதான்.” ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். வில்லனாக ஹான் ஆபிரகாம் நடித்துள்ளார். ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமீபத்தில் “பதான்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வைரலானது. […]
Continue reading …