
10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய நிலையில் தலைமறைவாகி உள்ளதையடுத்து அந்த மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகிலுள்ள மாணவர் அந்த மாணவியுடன் சகஜமாக பழகி உள்ள நிலையில் திடீரென மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவியின் கர்ப்பத்திற்கு காரமான பத்தாம் வகுப்பு […]
Continue reading …
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதிலாக பணத்தை வங்கியில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக அரிசி மற்றும் சக்கரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் பணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு புதுச்சேரியில் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரை கொடுப்பதற்கு பதிலாக […]
Continue reading …
தனியார் நிறுவனங்கள் கடந்த சில மாதங்கள் முன்னதாக பால் விலையை உயர்த்தியது. ஆனால் தற்போது சில நிறுவனங்கள் மீண்டும் பால் விலையை உயர்த்தியுள்ளன. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகின்றன. தமிழகத்தில் தினசரி பால் பயன்பாட்டில் 16 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்கிறது. மீத 84 சதவீத பால் தேவையை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் […]
Continue reading …
வைகை அணையின் கொள்ளளவு முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேனி மாவட்டத்திலுள்ள பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் வைகை அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 கன அடி என்ற நிலையில் தற்போது 69 கன அடி தண்ணீர் நிரம்பி விட்டது. இந்நிலையில் அணைக்கு வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து […]
Continue reading …
சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள கங்கேர் மாவட்ட எல்லையில் ரிசர்வ் படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் பலியாகி உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் நக்சல்கள் தப்பியோடி உள்ளனர். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கேர் மாவட்ட எல்லையில் பிரபலமான தேவ்கான், ஹுச்சாடி ஆகிய காட்டுப் பகுதிகளில் நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளதாக போலீசுக்கு தகவல் வந்ததையடுத்து, நாராயண்பூர் பகுதியைச் சேர்ந்த நக்சல் தடுப்பு படை போலீசார் அங்கு சென்று அவர்களைத் தேடினர். அப்போது, நக்சல்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியில் சுடவே, இருதரப்பினரும் […]
Continue reading …
ரஷ்யா உக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகின்றனர். சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியிருந்தது. இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன. தரை இலக்குகளைத் தாக்குவதற்கு, தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதை ஆயுதப் பற்றாக்குறையின் அறிகுறியாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வதேச வியூக ஆய்வுகள் நிறுவனத்தின் ராணுவ நிபுணரான டக்ளஸ் பாரி “சமீபத்திய […]
Continue reading …
ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து ஜிம்பாப்வே அணி […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தீபாவளி வரை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]
Continue reading …
திருப்பூரில் சாலையோரம் பச்சிளம் குழந்தை இறந்துகிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் தெற்குபாளையம் பகுதியில் ஒரு பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 7 மாதக் குறை பிரசவசத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து அதை மீடு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்குழந்தையை வீசிச் சென்றது யார் […]
Continue reading …
போக்குவரத்து துறைபேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக உயர்த்த பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் 80 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.8 லட்சம் வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆர்டிஓ அலுவலங்களில் பேன்சி நம்பர் வேண்டும் என்றால் அதற்கென கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் தற்போது பேன்சி நம்பர் கட்டணத்தை இரட்டிப்பாக்க போக்குவரத்துதுறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்டிஓ மூலம் பெற முடியாதபேன்சி எண்களுக்கு சிறப்பு கட்டணமாக […]
Continue reading …