Home » Entries posted by Shankar U (Page 43)
Entries posted by Shankar

முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்!

Comments Off on முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்!

கடந்த ஜனவரி 2ம் தேதி திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய விமான நிலையத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இன்று காலை 6 மணி முதல் புதிய விமான முனையமானது செயல்பாட்டுக்கு வந்தது. சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ விமானம் புதிய முனையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கியது. இதனை வரவேற்கும் விதமாக வாட்டர் சல்யூட் அடித்து வரவேற்றனர். சிங்கப்பூரிலிருந்து புதிய முனையத்திற்கு மற்றொரு விமானம் வந்தது. விமான நிலையத்தில் புதிய முன்னேற்றத்திற்கு வந்த விமான […]

Continue reading …

மாணவர்களுக்கு குட் நியூஸ்!

Comments Off on மாணவர்களுக்கு குட் நியூஸ்!

கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடன் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலை உள்ளது. இது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், “மாணவர்களின் […]

Continue reading …

இயக்குனருக்கு நடிகர் ரஹ்மான் பாராட்டு!

Comments Off on இயக்குனருக்கு நடிகர் ரஹ்மான் பாராட்டு!

‘அஞ்சாமை’ திரைப்படம் ரஹ்மான், விதார்த் மற்றும் வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. நீட் தேர்வினாலும், தேர்வின் போது மாணவ மாணவிகள் அனுபவித்த தாங்கமுடியாத மன உளச்சலையும், அதனால் அவர்களது குடும்பத்தார் நேரிடும் துயரங்களை மைய்யப் படுத்தி இப்படத்தை இயக்கி உள்ளார் புது முக இயக்குனர் சுப்பு ராமன். இவர் பிரபல இயக்குனர்களான லிங்குசாமி, மோகன் ராஜா ஆகியோரது ஹிட் படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர். ‘அஞ்சாமை’ படத்தில் மாணிக்கம் பெயரில் இன்ஸ்பெக்டராகவும், வக்கீலாகவும் […]

Continue reading …

செல்லாயி அம்மன் கோவிலில் பழத்தட்டு ஊர்வலம்!

Comments Off on செல்லாயி அம்மன் கோவிலில் பழத்தட்டு ஊர்வலம்!

மதுரை மாவட்டம் பாலமேடு, தேவேந்திர குல வேளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் திருக்கோவில் பொங்கல் உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த மே மாதம் 31ஆம் தேதி இவ்விழாவானது செல்லாயி அம்மனுக்கு சாமி சாட்டுதல் செய்து காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில் சிறப்பு வானவேடிக்கை முழங்க திருக்கண் திறந்து அலங்கார அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு […]

Continue reading …

சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய டிரைவர்!

Comments Off on சுங்கச்சாவடியை புல்டோசரால் இடித்து தள்ளிய டிரைவர்!

புல்டோசர் கொண்டு சுங்கச்சாவடியையே டிரைவர் இடித்து தள்ளியுள்ளார். உத்தர பிரதேசத்தில் முந்தைய காலங்களில் ஏதேனும் பரபரப்பான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை தண்டிக்கும் விதமாக அவர்களது வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டன. அதுபோல தற்போது ஒரு சுங்கச்சாவடியையே ஒரு நபர் புல்டோசர் கொண்டு இடித்துள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் ஹாபூர் பகுதியில் சிஜார்சி சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. அந்த டோல்கேட் வழியாக புல்டோசர் ஒன்று சென்றுள்ளது. அதற்கு சுங்க கட்டணம் கட்டும்படி சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியதற்கு அந்த புல்டோசர் டிரைவர் […]

Continue reading …

கமல்ஹாசனுக்கு பிறகு விஜய் சேதுபதி!

Comments Off on கமல்ஹாசனுக்கு பிறகு விஜய் சேதுபதி!

ஈவன்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2022 முதல் பெண்களால் பெண்களுக்காக அமீரகத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பான மெர்லின் தலைமையிலான பல்வேறு நிகழ்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. பெண்களுக்கு தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்ட இந்நிறுவனம், அமீரகத்தில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், திரைத்துறை புரோமஷனல் நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்தி முத்திரை பதித்து வருகிறது. தலைமை செயல் அதிகாரி மெர்லின் தலைமையில் இயங்கும் விட் ஈவன்ட்ஸ் குழு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மாவீரன்’, ‘போர் […]

Continue reading …

வித் அவுட் டிக்கெட் கும்பலால் தடுமாறிய வந்தே பாரத் பயணிகள்!

Comments Off on வித் அவுட் டிக்கெட் கும்பலால் தடுமாறிய வந்தே பாரத் பயணிகள்!

நாடு முழுவதிலும் சமீபத்தில் பல வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலில் பலரும் டிக்கெட் எடுக்காமல் பயணித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவிலேயே நாடு முழுவதும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் அதிநவீனமான தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல வழித்தடங்களில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களின் வழித்தடங்களில் பயணிக்கும் இந்த வந்தே பாரத் ரயிலில் ஏசியில்லா அமரும் இருக்கை, ஏசியுடன் கூடிய அமரும் இருக்கை வசதிகள் உள்ளது. சாதாரண […]

Continue reading …

முடிகிறதா ஜேபி நட்டாவின் பதவி?

Comments Off on முடிகிறதா ஜேபி நட்டாவின் பதவி?

ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் பதவி காலம் முடிவடைந்தது. தேர்தலை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் முடிவடைந்து பதவி ஏற்பு விழாவும் முடிவடைந்து விட்டதை அடுத்து பாஜக தேசிய தலைவர் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு விருப்பமானவர் என்று கூறப்படும் வினோத் தாவ்டே பாஜக தேசிய தலைவர் பதவிக்கு பெயர் பரிசீலனையில் உள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் துணை […]

Continue reading …

தமிழிசை நிரூபித்தால் பாஜகவிலிருந்து விலக தயார்; திருச்சி சூர்யா!

Comments Off on தமிழிசை நிரூபித்தால் பாஜகவிலிருந்து விலக தயார்; திருச்சி சூர்யா!

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை, மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார். செய்தியாளர்களிடம் திருச்சி சூர்யா, “விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்று இருக்கிறார். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற திராவிட கட்சிகளின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பணமில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்கிற முடிவை எங்கள் மாநில தலைவர் எடுத்தார். […]

Continue reading …

பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்!

Comments Off on பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்!

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10ம் தேதி அன்று இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமூக நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்தியில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கவும், குழந்தைகள் மையங்கள் / சத்துணவு மையங்களில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும். […]

Continue reading …