
வந்தே பாரத் ரயில் என்ஜினின் முன் பகுதி எருமைகள் மோதியதால் சேதமடைந்துள்ளது. சமீபத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில்கள் ரயில்வே துறைக்கு அளிக்கப்பட்டு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று மும்பை செண்ட்ரலில் இருந்து குஜராத் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 11.15 மணியளவில் இந்த ரயில் வத்வா ரயில் நிலையத்திற்கும், மனிநகர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எருமைகள் தண்டவாளத்தில் […]
Continue reading …
பேருந்து ஒன்றில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது உத்தரகாண்ட் பகுதியில் திடீரென கவிழ்ந்ததில் 32 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியிலுள்ள பவுரி மாவட்டத்தில் பிரோன்கால் பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளனர். பேருந்து சிம்ரி பகுதியில் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்தபோது வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்து விழுந்தது. பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் […]
Continue reading …
இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் இந்து அல்ல..! என்று பேசிய கருத்துக்கு திருமாவளவன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் மணி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய இயக்குனர் வெற்றிமாறன், “தமிழர்களின் அடையாளங்கள் திரிக்கப்படுவதாகவும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக திரிக்கும் முயற்சிகள் நடக்கிறது” என்று பேசினார். இது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல என பேசியுள்ளார். இன்று வள்ளலாரின் முப்பெருவிழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. திமுக அல்லது திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆன்மீகத்தை அரசியலுக்கும் சுயநலத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிராகதான் திமுக குரல் கொடுக்கும்” என்று கூறினார். இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு தபால் உறையை […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தைப் பார்த்த பிறகு ஜெயம் ரவியை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளது குறித்து, அவரே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்துள்ளது. இப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “பொன்னியின் செல்வன்” படத்தைப் பார்த்துவிட்டு, இப்படத்தில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள, ஜெயம் ரவியை […]
Continue reading …
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் புதிய திரைப்படமான “டிரைவர் ஜமுனா” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “பர்ஹானா” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் என்பவர் இயக்கி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி […]
Continue reading …
சென்னை மாநகராட்சி அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 2022 மற்றும்- 2023ம் ஆண்டு காலம் முதல் அரையாண்டு சொத்து வரி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. அதேபோல் தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை […]
Continue reading …
இயக்குனர் ராஜமவுலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. […]
Continue reading …
இன்று இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் என்ற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சுமார் 247 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், […]
Continue reading …
பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறிய நாடான உக்ரைனுடன் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இப்போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. சமீபத்தில், உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புதின் அறிவித்தார். ஏற்கனவே, உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் […]
Continue reading …