
இந்திய ரயில்வே இனி ரயில்கள் மின்னல் வேகம் செய்யும் என்று அறிவித்துள்ளது. இனி அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் சுமார் 2 கோடியே பயணிகள் பயணம் செய்கின்றனர். இவ்வாண்டிற்கான ரயில் பாதை அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து ரயில்களின் வேகமும் […]
Continue reading …
தொழில்நுட்ப மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் மியான்மரிலிருந்து இன்று தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, ஏஜெண்டுகள் மூலமாக இந்திய ஐடி பணியாளர்கள் பலர் தாய்லாந்திற்கு பதிலாக மியான்மருக்கு கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொண்டு டிஜிட்டல் மோசடி செயல்களில் அவர்களை ஈடுபடுத்தியதாகவும், 17 மணி நேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. […]
Continue reading …
இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் திருமாவளவள், சீமான் கட்சிகளை தடை செய்வதோடு, இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் பேசி வருவதாகவும் இதையடுத்து இருவரையும் கைது செய்து அந்த இருவருடைய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். […]
Continue reading …
போக்குவரத்துத்துறை வாய்மொழியாக டிக்கெட் எடுத்தும் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய விரும்பினால் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். அவ்வாறு டிக்கெட் கேட்கும் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்குமாறு வாய்மொழியாக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவில் பேசிய போது பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பல பெண்கள் தாங்கள் […]
Continue reading …
கருணாஸ் ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? என கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, “ராஜராஜசோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்து விட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்; அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக்கொண்டது. இப்போதும் […]
Continue reading …
நடிகர் விஜய் 67 படத்திற்கான விறுவிறுப்பான வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். “விக்ரம்“ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. படத்தில் கதாநாயகி என்று யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி […]
Continue reading …
“வேள்பாரி” திரைப்படமும் “பாகுபலி,” “பொன்னியின் செல்வன்” திரைப்பட வரிசையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று திரைப்படங்களின் வெற்றியையடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அதில் கதாநாயகனாக கேஜிஎப் படப்புகழ் யாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று […]
Continue reading …
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் “வணங்கான்” திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களே நடைபெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் நிலை என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. “நாச்சியார்” படத்துக்குப் பின்னர் இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் “வணங்கான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக […]
Continue reading …
ஜியோ இந்தியாவின் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளது. ஆனால் தற்போது பட்ஜெட் விலையில் லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் 4ஜி சேவையோடு நுழைந்த ஜியோ நிறுவனம் அந்த சமயம் பிரத்யேக 4ஜி ஸ்மார்ட்போன்களை அன்லிமிடட் டேட்டா வசதியுடன் வழங்கியது. தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் […]
Continue reading …