
பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைக்கின்றார். பிரதமர் மோடி நாளை முதல் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்தது. இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் நாளை முதல் இந்தியாவில் 5ஜி […]
Continue reading …
உச்சநீதிமன்றம் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான பெண்கள் கருக்கலைப்பு செய்ய ஏற்கனவே சட்டபூர்வ உரிமை இருக்கும் நிலையில் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்ய சட்டபூர்வ உரிமை வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. பாதுகாப்பான சட்டபூர்வமான கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களுக்கும் உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கருவை கலைக்க அனுமதி கோரி திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி […]
Continue reading …
பேருந்து நடத்துனரிடம் ஒரு பாட்டி, “உன் ஓசி டிக்கெட் எனக்கு வேண்டாமென்று” வாக்குவாதம் செய்துள்ள பாட்டியின் வீடியோ வைரலாகி உள்ளது. கடந்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்த நிலையில் நகர, உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் இலவச பேருந்தில் ஏறிய பாட்டி ஒருவர் டிக்கெட்டிற்கு பணம் தருகிறார். அதற்கு பேருந்து நடத்துனர் இது […]
Continue reading …
ஐயான் சூறாவளி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. இந்நிலையில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரியா மாகாணத்தில் உள்ள கேயோ கோஸ்டா கடற்கடை அருகே ஐயான் சூறாவளி புயல் கரையை கடந்தது. அமெரிக்காவில் பாதிப்புகளை ஏற்படுத்திய மோசமான சூறாவளி புயல்களில் ஒன்றாக ஐயான் கூறப்படுகிறது. மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகமாக காற்று வீசியபடி கரை கடந்த ஐயான் சூறாவளி புயல் ஆர்லேண்டோ மற்றும் கேப் கேனவரேல் பகுதிக்கு இடையே மையம் கொண்டபோது காற்றின் […]
Continue reading …
சென்னையிலிருந்து தொடர் விடுமுறை நாட்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப் போவதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை ஆகியவை காரணமாக அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி அரசு விடுமுறை வருவதால் மூன்றாம் தேதி மட்டும் விடுமுறை போட்டால் ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்கள் […]
Continue reading …
கடந்த மே மாதம் 21ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2ஏ, மற்றும் குரூப் 4 நடைபெற்ற தேர்வின் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அதேபோல் குரூப் -4 பதவிகளுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. இத்தேர்வை லட்சக்கணக்கானவர்கள் எழுதினர். இந்நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் […]
Continue reading …
சீன விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு நாட்டு விண்வெளி ஆய்வு மையங்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் சமீபகாலத்தில் விண்வெளி ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனக்கென தனி விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தொடங்கியுள்ள சீனா, செவ்வாய் கிரகத்திலும் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதற்காக செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக தியான்வென் – 1 என்ற விண்கலத்தை அனுப்பிய சீன விண்வெளி ஆய்வு மையம் அதன் மூலம் […]
Continue reading …
சமூக வலைதளங்களை பயன்படுத்த இலங்கையில் அரசு ஊழியர்களுக்கு தடை விதிப்பதாக அதிரடி உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் பொது மக்கள் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டம் காரணமாக கோத்தபாய ராஜபக்ஷ மகிந்தா ராஜபக்சே உட்பட ராஜபக்சவின் குடும்பத்தினர் பதவி விலகினார்கள். இந்நிலையில் மீண்டும் இலங்கையில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதாகவும் போராட்டம் பரவ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து […]
Continue reading …
மர்ம நபர்கள் மிரட்டல் கடிதத்தில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று பொள்ளாச்சியிலுள்ள மேற்கு காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும் என எழுதப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் […]
Continue reading …
தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஒப்பந்தம் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க ஒப்பந்தப்புள்ளி கோரி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வரும் கல்வியாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படும் என்ற தகவலையும் தமிழக அரசு உறுதி செய்துள்ளதால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சி […]
Continue reading …