
இசையமைப்பாளர் சாம் சி எஸ்க்கு பாலிவுட்டிலிருந்து படவாய்ப்புகள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு, புஷ்கர் & -காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை ஹ்ருத்திக் ரோஷனும், மாதவன் கதாப்பாத்திரத்தை சயிப் அலிகானும் ஏற்று நடித்துள்ளனர். தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழில் இசையமைத்த சாம் சி எஸ் இப்படத்துக்கும் […]
Continue reading …
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து இவ்வாண்டின் மிகப்பெரிய திரைப்படம் “விக்ரம்” உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்த படம் “விக்ரம்.” இத்திரைப்படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3ம் தேதி இப்படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இத்திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் […]
Continue reading …
வேள்பாரி நாவலை திரைப்படமாக இயக்குனர் ஷங்கர் எடுக்க உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் “இந்தியன் 2” படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அதோடு தற்போது ராம்சரண் தேஜா நடிக்கும் உள்ள தெலுங்கு படத்தையும் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார். இப்போது இயக்குனர் ஷங்கர் […]
Continue reading …
ஆந்திராவின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி மலைப்பாதையில் மின்சார பஸ்கள் இயக்க அனுமதி அளித்துள்ளார். திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் ஏழுமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அதிகமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், கால விரயத்தை குறைக்கவும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன. மக்கள் அதிக அளவில் வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில […]
Continue reading …
இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் காளகஸ்தி நாதம்புரம் பகுதியிலுள்ள பிரதான சாலையில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் இன்று வந்து கொண்டிருந்தன. அப்போது, இடம்புறம் வருவதற்குப் பதில், பைக்கை ஓட்டி வந்தவர் வலது புறம் வந்துள்ளார. எதிர்ப்புறம் வந்த மற்றொரு பைக் அந்த பைக்கின் மீது மோதியது. மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, வந்த காரில் எதிர்ப்புறம் வந்தவர் […]
Continue reading …
நீட் தேர்வினால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைக்கு தூண்டுவது அமைச்சர்கள்தான் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு. மத்திய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்திருக்க வேண்டும். இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளைப் பார்க்கும்போது ஆதரவாளர் அருகில் இல்லாத சூழல் நிலவி இருக்கலாம். […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் மற்றும் நடிகருமான பாரதிராஜா உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாரதிராஜாவின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம் என்றும் எங்களுடைய சொந்த பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் விளக்கமளித்தார். மேலும் அவர் கூறும் போது, […]
Continue reading …
இன்று முதல் தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50, இரண்டு மாதங்களில் 301 முதல்- 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்தப்பட உள்ளது. அதே போல இரண்டு மாதங்களில் 501 முதல் -600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தப்பட உள்ளது. இரண்டு மாதங்களில் 601 முதல்- 700 யூனிட்கள் […]
Continue reading …
பிரிட்டன் மகாராணி எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார் என்பதை பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில், “பிரிட்டன் அரசு குடும்பத்தில் நீண்ட காலம் மகாராணியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாகவும், 70 ஆண்டுகள் பதவியில் இருந்து, 15 பிரதமர்களை நியமித்து, நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருந்தவரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
Continue reading …
தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் டாடா நிறுவனம் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்யவிருப்பதாக இன்று அறிவித்துள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையில் 5,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை […]
Continue reading …