Home » Entries posted by Shankar U (Page 459)
Entries posted by Shankar

தென்காசியில் இளம்பெண் கொலை!

Comments Off on தென்காசியில் இளம்பெண் கொலை!

தென்காசியில் திருமணமான ஒரே வாரத்தில் இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒன்றாம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்ற பகுதியைச் சேர்ந்த இசக்கிலட்சுமி என்ற இளம் பெண்ணுக்கு திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் அதே பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் இசக்கிலட்சுமி ஓடிவிட்டதால் திருமணம் நின்று போனது. ராம்குமார் மற்றும் இசக்கிலட்சுமி திருமணம் செய்து சென்னையில் வாழ்ந்துள்ளனர். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து இசக்கி லட்சுமி தனது சொந்த ஊருக்கு […]

Continue reading …

நாய் வளர்த்தவரை கொன்ற கோழி உரிமையாளர்!

Comments Off on நாய் வளர்த்தவரை கொன்ற கோழி உரிமையாளர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கோழியை கடித்த நாயின் உரிமையாளரை கொன்ற சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் வசிக்கும் விஜயனின் மகன் விஷ்ணு(26). இவர் செல்லப்பிராணியாக தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த முத்தன் என்பவரை விஷ்ணுவின் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்தன் சென்று விஷ்ணுவிடம் போய் கேட்டுள்ளார். அப்போது, கோபமடைந்த முத்து என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று […]

Continue reading …

நூற்றாயிரம் ஆண்டுக்கு முன்பே அறுவை சிகிச்சையா?!

Comments Off on நூற்றாயிரம் ஆண்டுக்கு முன்பே அறுவை சிகிச்சையா?!

இந்தோனேசிய குகையில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்ததாக கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலை கண்டுபிடித்துள்ளனர். இந்த இளைஞரின் உடலில் அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின் தோற்றம் ஏற்கெனவே கருதியிருந்ததைவிட 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நமக்கு தெரிவிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சிக்கலான அறுவை […]

Continue reading …

கமல் தயாரிப்பில் விஜய் படமா?

Comments Off on கமல் தயாரிப்பில் விஜய் படமா?

நடிகர் விஜய், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்மற்ற தகவல்கள் பரவி வருகிறது. மற்ற நடிகர்களை வைத்து வரிசையாக நடிகர் கமல்ஹாசன் தற்போது திரைப்படங்களை தயாரித்து வருகிறார். விக்ரம், சிவகார்த்திகேயன் வரிசையில் சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் இணையப் போவதாக கூறப்படுகிறது. கமலஹாசன் தயாரிக்கப் போவதாக கூறப்படும் திரைப்படம் பற்றி புதிய தகவல் வெளியாகியுள்ளது. அப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் விஜய்யை வைத்து “யோகன் அத்தியாயம் ஒன்று” திரைப்படத்தை அறிவித்து […]

Continue reading …

இவ்வாண்டும் டில்லியில் பட்டாசுக்கு தடை!

Comments Off on இவ்வாண்டும் டில்லியில் பட்டாசுக்கு தடை!

டில்லி அரசு 5வது ஆண்டாக இவ்வாண்டும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து அறிவித்துள்ளது. தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு அதிகரித்த நிலையில் மனிதர்கள் வாழ முடியாத இடமாக டில்லி மாறி வருகிறது. இதனால் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு வாகன போக்குவரத்தை குறைத்தல் உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை டில்லி அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள டில்லி சுற்றுசூழல்துறை அமைச்சர் […]

Continue reading …

மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

Comments Off on மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப் “என்னை விட மோடியின் சிறந்த நண்பர் யாருமில்லை” என்று கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அரசியல்வாதி மட்டுமின்றி அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் அமெரிக்க பிரதமராக இருக்கும்போது, கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து கவுரவித்தார். 2021ல் அவர் இரண்டாம் முறை […]

Continue reading …

“விக்ரம்“ வெற்றி பற்றி பேசிய ரஜினிகாந்த்!

Comments Off on “விக்ரம்“ வெற்றி பற்றி பேசிய ரஜினிகாந்த்!

“பொன்னியின் செல்வன்” டிரையிலர் விழாவில் நடிகர் கமல்ஹாசனின் சமீபத்தைய வெற்றிப்படமான “விக்ரம்” திரைப்படத்தைப்பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரையிலர் நேற்று ரிலீசானது. விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேடையில் ரஜினி, கமல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் ஒன்றாக தோன்றி பேசினார்கள். விழாவில் கமல் பேசி முடித்ததும், ரஜினிகாந்த் பேச ஆரம்பித்ததும், “எல்லோருக்கும் நன்றி. முதலில் விக்ரம். (கமலைப் […]

Continue reading …

உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு!

Comments Off on உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு!

உச்ச நீதிமன்றம் இனிமேல் காகிதமில்லா நடைமுறை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்கு அடுத்து, ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 49வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். உச்ச நீதிமன்றத்தின் இந்திய அரசியலமைப்பு அமர்வில் இனிமேல் காகிதமில்லா நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அங்குள்ள வழக்கறிஞர்களுக்கும், தொழில் நுட்பப்பயிற்சி அளிக்கப்படும் என்றும், காகிதக் கட்டுகளுக்குப் பதில் வழக்கு விவரங்களை ஸ்கேன் […]

Continue reading …

வானதி சீனிவாசனின் பரபரப்பு பேச்சு!

Comments Off on வானதி சீனிவாசனின் பரபரப்பு பேச்சு!

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடைபயணம் சென்றாலும் எந்த பயனில்லை என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று தொடங்கும் இந்த நடைபயணம் 150 நாட்கள் கழித்து காஷ்மீரில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நடை பயணம் குறித்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ “இறந்து […]

Continue reading …

மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

Comments Off on மூக்கு வலி செலுத்தும் மருந்து அறிமுகம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் உட்பட தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி திட்டம் மூலமாக நாடு முழுவதும் 150 கோடி டோஸுக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போல் அல்லாமல் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா […]

Continue reading …