
பைனான்ஸியர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டுகளால் நடிகர் அஜீத் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜீத்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் பி.வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இப்படத்தில் […]
Continue reading …
திமுக பிரமுகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி உள்ளது. கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகத் தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின் அவ்வபோது மேடைகளில் முழங்கி வரும் […]
Continue reading …
எச்.ராஜா ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது கண்டிக்கதக்கது என்று பேட்டியளித்துள்ளார். இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து தனது ஒற்றுமை என்ற யாத்திரையைத் தொடங்கவுள்ளார். இதற்காக கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த யாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். கோவையில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தை தொடங்கி வைத்தார். இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி நடை பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைப்பயண தொடக்க விழாவில் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இப்பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனது 150 நாட்கள் […]
Continue reading …
நடிகர் சூர்யாவின் சினிமா பயணம் 25 ஆண்டுகளாகிறது. அதை குறிப்பிட்டு அவரது தம்பி நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களையும், பாராட்டையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த 1997ம் ஆண்டு விஜய் நடித்த “நேருக்கு நேர்” என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூர்யா. இத்திரைப்படம் 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி வெளியான நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து “சூர்யா 25” என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். […]
Continue reading …
கனியாமூர் பகுதியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சசியை ஏற்படுத்தியது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் புகுந்து தீவைத்தனர். அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தை அடுத்து, அப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்பட்டது, நேரடி வகுப்புகள் வேண்டுமென்று அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த மாதம் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று […]
Continue reading …
நர்சிங் மாணவி ஒருவர் தனக்கு தூக்கம் வராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் நர்சிங் படித்து கொண்டிருந்த மாணவி ஒருவருக்கு தூக்கம் வராதது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. இதையடுத்து அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் நர்சிங் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி எழுதிய […]
Continue reading …