
இந்தியா முழுதும் ஒற்றுமை நடைப்பயணமாக ராகுல் காந்தி செல்ல உள்ள நிலையில் அவரை குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி. ராகுல் காந்தி செப்டம்பர் 7ம் தேதி தொடங்கி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒற்றுமை நடைப்பயணம் செய்ய உள்ளார். இது தொடர்பாக இன்று திருச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “இனம், மொழி, ஜாதி என்று பிரித்துப் […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க […]
Continue reading …
ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் கால்பதித்துள்ளார். இவரைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் பிரபல நடிகராக இருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த “தி கிரே மேன்” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து “தி கிரே மேன் 2” திரைப்படத்திலும் தனுஷிற்கு முக்கிய ரோல் இருப்பதாக படத்தின் டைரக்டர்கள் ருசோ ப்ரதர்ஸ் உறுதி செய்தார். தனுஷ் பல […]
Continue reading …
ஜெயம் ரவி அடுத்து நடிக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். பிரம்மாண்டமாக உருவாகியுள்ளா இப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளதால், ஜெயம் ரவி ரொம்பவே உற்சாகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் நடித்துள்ள ‘அகிலன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து இரண்டு […]
Continue reading …
லட்சத்தீவில் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் மதுரை மாணவனுக்கு எம்.பி. மேற்கொண்ட முயற்சியால் தேர்வு மையம் மதுரைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நீதி கிடைத்ததாக குறிப்பிட்டு தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர மதுரையை சேர்ந்த மாணவன் லோகேஷ்வருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்துள்ளது. தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக வந்துள்ளது. மாணவனின் தந்தை எம்.பி.வெங்கடேசனை நாடியுள்ளார். இதையடுத்து […]
Continue reading …
அமைச்சர் எ.வ.வேலு கிங்ஸ் இன்ஸ்டியூட் வளாகத்தில் சுவர் உதிரும் விவகாரத்தில் ஒப்பந்ததாரர் தலையிட்டு முழுமையாக சரி செய்து தருவதாக உறுதியளித்துள்ளதாக கூறினார். அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு ஆகியோர் சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆய்வு செய்தனர். செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 2016ம் ஆண்டு தேசிய முதியோர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட திருக்கோவில்களில் பல்வேறு கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில்களில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டிடங்களை காணொளி கட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.104.77 கோடி மதிப்பீட்டில் 18 திருக்கோவில்களில் திருமண மண்டபங்கள், பக்தர்கள் தாங்கும் விடுதி, விருந்து மண்டபம், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை கட்டப்பட்டுள்ளது. இதே போல அன்னதான […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியின் மூரத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராகுல்காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். தற்போது அவர் பிரதமர் மோடியை மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் என பாராட்டியுள்ளார். இதுவரை மோடியை முரட்டுத்தனமான மனிதர் என நான் தவறாக நினைத்துவிட்டேன். தனிப்பட்ட முறையில் ராகுல்மீது எந்தவெறுப்பும் இல்லை. அடுத்து குலாம் நபி தனி கட்சி துவங்குவாரா? அல்லது பாஜகவில் இணைவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு […]
Continue reading …
பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரந்தூர் விமான நிலைய திட்டம் கண்டிப்பாக வேண்டும் என்று பரபரப்பாக பேட்டியளித்துள்ளார். திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுகிறது. எந்த மாநிலத்து மக்களுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ அந்த மொழியில் தான் பேச முடியும். பிரதமர் தமிழில் பேசினால் ஏமாற்றுகிறார் என சொல்கிறார்கள். வைகோ இப்படி […]
Continue reading …
உயர்நீதிமன்றம் கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்தனர். இதற்கு நியாயம் கேட்டு சாலை மறியல், போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளியும், பள்ளி வாகனமும் சூறையாடப்பட்டது. மாணவியின் மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் […]
Continue reading …