
பிசிசிஐ வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் இந்திய வீரர்கள் விளையாட கூடாது என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் சிலர் வாங்கி உள்ளனர். குறிப்பாக ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் […]
Continue reading …
தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான போட்டி நடக்க உள்ளது. இந்திய அணியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் சவுரவ் கங்குலி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியவர். கடந்த 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது பிசிசிஐ தலைவராக கடந்த 3 ஆண்டுகள் செயல்படுகிறார். இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் தலைமையில் இந்திய வீரர்கள் விளையாடும் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் மகாராஜாஸ் […]
Continue reading …
சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை துறைமுகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து இந்திய அரசின் கண்டனத்திற்கு உள்ளான சீனாவின் உளவுக்கப்பல் இலங்கை வரவில்லை என்று அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளது. கடந்த 11ம் தேதியன்று சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர இருப்பதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17ம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு […]
Continue reading …
விரைவில் கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் நிறுவனம் பால் வினியோகம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆவின் பால் தற்போது பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக சமீபத்தில் மத்திய அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து பெரும்பாலான தனியார் பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டிலுக்கு மாறியுள்ள நிலையில் ஆவின் பால் நிறுவனம் மட்டும் இன்னும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வினியோகம் செய்து வருகிறது. இது […]
Continue reading …
ரூபாய் 99 மட்டுமே சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கில் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திரையரங்குகளில் 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை வடபழனியிலுள்ள கமலா திரையரங்கில் 99 ரூபாய் மட்டுமே டிக்கெட் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த கட்டணம் வாரத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே. ஒவ்வொரு புதன்கிழமையும் 99 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. […]
Continue reading …
மது அருந்திய நிலையில் பள்ளி மாணவிகள் ரோட்டில் மயங்கி நிலையில் கிடந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 11ம் வகுப்பு படிக்கின்ற கரூரைச் சேர்ந்த அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முன்னதாக நடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மறுதேர்வு எழுத வேறு ஒரு பள்ளிக்கு சீருடையில் சென்றதாக கூறப்படுகிறது. தேர்வு எழுதி முடித்ததும் மதுபானக்கடைக்கு சென்ற மாணவிகள் அங்கு ஒயின் வாங்கி குடித்ததாக தெரிகிறது. பின்னர் வீடு திரும்பிய மாணவிகள் போதை தலைக்கேறியதால் கரூர் சர்ச் […]
Continue reading …
தலைநகர் டில்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயமென அரசு உத்தரவிட்டள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் இந்தியாவில் மொத்த எண்ணிக்கை 44,203,754 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 526,826 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 43,535,610 என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. டில்லி உட்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டி மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.500அபராதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி […]
Continue reading …
திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மண்னச்ச நல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலரான நித்யாவின் கணவர் வெற்றிச் செல்வன். அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இக்கடனை திருப்பிக் கொடுக்காமல் பல ஆண்டுகள் குணசேகரனை அலைக்கழித்து வந்துள்ளார். நேற்றும் வெற்றிச்செல்வனிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட சென்றுள்ளார் குணசேகரன். அப்போது, மதுபோதையில் இருந்த […]
Continue reading …
டிஜிபி சைலேந்திர பாபு ஆயிரம் காவலர்களுக்கு பிரியாணி விருந்தும், 3 நாட்களுக்கு விடுமுறையும் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை 28ம் தேதி தொடங்கி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கோலாகமாக தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி முடிவடைந்தது. இதற்கான பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் வந்திருந்தனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் சென்னை வரும் சர்வதேச வீரர்கள்களுக்காக விமான நிலையம், தங்கும் விடுதிகள் மற்றும் போட்டி நடைபெறும் இடத்திலும் காவல் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. பல […]
Continue reading …
தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மற்றும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பால் பயன்பாட்டில் 16 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்கிறது. மீத 84 சதவீத பால் தேவையை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. தனியார் பால் நிறுவனங்கள் பால் பாக்கெட் விலையை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக உயர்த்த […]
Continue reading …