
ஆந்திர மாநிலத்தில் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவியை காரில் வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டக்கல்லூரியில் கர்னூல் பகுதியைச் சேர்ந்த மாணவி(24) இறுதியாண்டு படித்து கொண்டிருக்கிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்த பின், பேருந்திற்காக தாமனேஸி பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார். அப்போது, காரில் வந்த 2 வாலிபர்கள் மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் சென்றுள்ளனர். உடனே அருகில் இருந்த மக்கள் போலீசாருக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவித்தனர். […]
Continue reading …
முதலமைச்சருக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி ஒரு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்து வருகிறது. அங்குள்ள குண்டூரைச் சேர்ந்த வர்மா (40) அதே பகுதியில் வசிக்கும் பைனான்சியர் ஒருவரிடம் கடந்த 2010ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அக்கடனை வர்மா திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பைனான்சியர் இன்னும் பணம் கொடுக்க […]
Continue reading …
ஒய்எஸ்ஆர்சிபிச் சேர்ந்த எம்.பி. ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோ தனக்கு தொடர்பானது அல்ல, போலியானது என்று அவர் கூறியுள்ளார். கோரண்ட்லா மாதவ் இந்துப்பூர் பகுதியின் ஒய்எஸ்ஆர்சிபி எம்.பி.யாக உள்ளார். இவர் ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ போலியானது என்று எம்பி கோரண்ட்லா மாதவ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். இச்செயல் […]
Continue reading …
ஹரித்துவாரிலுள்ள சிறைச்சாலையில் 40 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா 4 வது அலை விரைவில் வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரிலிலுள்ள மாவட்ட சிறைச்சாலையில், ஒரு கைதிக்கு தொடர் காய்ச்சல் நிலவியது. இதையடுத்து. மற்ற சிறைக் கைதிகளைப் பரிசோதனை செய்ததில், மொத்தம் 43 கைதிகளுக்கு கொரோனா தொற்று நோய் உறுதியாகியுள்ளது. கொரொனா […]
Continue reading …
தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்புகள் தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் கடந்த 2020ம் ஆண்டு கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நம்மை பாடாய் படுத்தி வருகிறது. மருத்துவ வல்லுனர்கள் விரைவில் கொரொனா 4வது அலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில் […]
Continue reading …
நடிகர் விஜய் சேதுபதி இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதைப் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீராம் ராகவன் இந்தி திரைப்படங்களை இயக்குபவர். அவர் இயக்கிய “பட்லாபூர்” மற்றும் “அந்தாதூன்” ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் “அந்தாதூன்” உலகளவில் புகழ்பெற்ற படம். இப்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்போது ஸ்ரீராம் தனது அடுத்த படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் […]
Continue reading …
மீண்டும் ஒரு பள்ளி மாணவி தமிழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இன்று பள்ளிப்பட்டு தாலுக்கா ராமா நாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கங்கோத்ரி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளிப்பட்டு தாலுக்காவின் ராமா நாயுடு கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தாமு. இவரது மனைவி ராகராஜேஸ்வரி. இவர் கொரோனாவால் கடந்தாண்டு உயிரிழந்தார். […]
Continue reading …
காவலர் ஒருவர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பணியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சென்னையில் நடைபெற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக வருகிறது. மாமல்லபுரத்தில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடந்தது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கிலேயே நடத்தப்பட உள்ளது. இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக்காக காவலர்களும் பணியில் […]
Continue reading …
அமைச்சர் நாசர் விரைவில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப் போவதாக கூறியுள்ளார். “ஆவின் பால் தயாரிக்கும் 28 யூனிட்டுகளில் வாட்டர் பிளாண்ட் உள்ளது. எனவே விரைவில் ஆவின் நிறுவனம் குடிநீர் பாட்டில் தயாரிக்க உள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும். இதனால் ஆவின் நிறுவனத்தின் வருமானமும் அதிகரிக்கும். மேலும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரங்களை வெளியிடுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.” இவ்வாறு […]
Continue reading …
தற்போது கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி வரை இம்மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் […]
Continue reading …