
தலைமை செயலர் இறையன்பு இனு தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தண்டோரா அறிவித்தல் முறை தேவையில்லை என அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு காலமாக தமிழகத்தில் ஊராட்சி, கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பல்வேறு அரசு அறிவிப்புகள், ஏலம், வெள்ள அபாய எச்சரிக்கை போன்றவற்றை தண்டோரா மூலமாக தெருத் தெருவாக அறிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதிய தமிழக தலைமை செயலர் இறையன்பு, தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெருகிவிட்ட நிலையில் இனியும் தண்டோரா போடுவது […]
Continue reading …
இயக்குனர் சிவாவின் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் “வணங்கான்’’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு பாலா, சூர்யாவுடன் இணைந்துள்ள இப்படத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. 2வது கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் சூர்யா பாலாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருப்பதாக […]
Continue reading …
பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் 5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஏழு நாட்களாக நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்தது என மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்களும் கலந்து கொண்டது. இதில் அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. கடந்த 7 நாட்களில் நடந்த சுற்றுகளில் ஒரு […]
Continue reading …
நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தியை அடித்துக் கொலை செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பிபி பாளையத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார். அவர் நேற்று இரவு (ஆக. 2) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, […]
Continue reading …
பொதுமக்களுக்கு இம்மாதம் மெரினாவில் நடைபெற உள்ள 75வது சுதந்திர தினவிழாவை பார்வையிட அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 75ம் ஆண்டு சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாட்டில் அனைவரும் இதைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். சமீபத்தில் பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சமூகவலைதளங்களில் உள்ள டிபியில் தேசிய கொடியை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். வீடுதோறும் […]
Continue reading …
கழிவுநீர் கால்வாய் கோவையில் கனமழை பெய்த நிலையில் காவலர் ஒருவர் சுத்தம் செய்கின்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்கிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர், தேனி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கோவையில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோவையில் பெய்த கனமழையால் கழிவுநீர் கால்வாய் அருகே குப்பைகள் சேர்ந்து நீர் வெளியேற முடியாதபடி […]
Continue reading …
குப்பை தொட்டியில் சக்திவாய்ந்த துப்பாக்கி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மத்திய சிறை அருகே உள்ள குப்பைத் தொட்டியில் தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்யும் போது ஒரு கையடக்க துப்பாக்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து சோதனையிட்டு வருகின்றனர். குப்பைத் தொட்டியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அந்த துப்பாக்கி சட்டவிரோதமாக சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் […]
Continue reading …
இன்று டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொள்கிறார். பாஜக அரசு மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று டில்லியில், அரிகி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி, டில்லியில் உள்ள ஜல் மந்தரின் போராட்டம் […]
Continue reading …
தனுஷுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மலையாளத்தில் “பிரேமம்“ படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் ஒரு புதிய பட புரோமோஷன் நிகழ்ச்சியினால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில், தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி,” “தள்ளிப்போகாதே” உட்பட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் “கார்த்த்கேயா பேஜஸ்,” “பட்டர்பிளை” உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில், நிகில் சித்தார்த்தின் ஜோடியாக அனுபமா நடித்துள்ள படம் “கார்த்திகேயா 2.” […]
Continue reading …