Home » Entries posted by Shankar U (Page 487)
Entries posted by Shankar

சர்ச்சைக்கு விளக்கமளித்த பாடகி!

Comments Off on சர்ச்சைக்கு விளக்கமளித்த பாடகி!

“என்ஜாய் எஞ்சாமி” பாடலை பாடிய தீ சமீபத்தில் பாடல் பற்றிய சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ளார். “அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்குமே உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன்” என்று கூறியுள்ளார் பாடகி தீ. “எஞ்சாய் எஞ்சாமி” பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் யுடியூபில் வெளியானது. இப்பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுதினார். தீ அவருடன் இணைந்து பாடியிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா ஸ்டூடியோவின் இணையப்பக்கத்தில் பாடல் வெளியானது. வெளியானதிலிருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இப்பாடல் திரையுலகினர் […]

Continue reading …

வியப்பில் ஜான்வி கபூர்!

Comments Off on வியப்பில் ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் ராஷ்மிகா மந்தனாவுக்கு மட்டும் எப்படி பாலோவர்கள் அதிகரிக்கிறார்கள் என்று வியந்து பேசியுள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில், கான் நடிகர்கள் பற்றியும், ராஷ்மிகா மந்தனா பற்றியும் பேசியுள்ளது வைரலாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான ஜான்வி கபூர் நடித்துள்ள திரைப்படம் “குட் லக் ஜெர்ரி.” இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது-. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜான்வி, “இந்தியில் சல்மான் கான், ஷாரூக்கான், அமீர் கான் […]

Continue reading …

பேருந்தில் சிக்கி மாணவர் பலி!

Comments Off on பேருந்தில் சிக்கி மாணவர் பலி!

பள்ளி மாணவர் விழுப்புரத்தில், தனியார் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். அனீஸ் என்ற மாணவர் விழுப்புரம் மாவட்டம் பழைய பேருந்து நிலையமருகே வந்த பேருந்தில் பயணித்துள்ளார். மாணவர் அனீஸுடன் வந்தவர்கள் ஓடும் பேருந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனனர். அப்போது, அனீஸ் இறங்க முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த வேகத்தில் பேருந்தின் பின்பக்கச் சக்கரத்தில் சிக்கி அனீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் […]

Continue reading …

ஓடிடியில் வரவேற்பு பெற்ற “மாமனின்”!

Comments Off on ஓடிடியில் வரவேற்பு பெற்ற “மாமனின்”!

சீனு ராமசாமி இயக்கிய “மாமனிதன்” தியேட்டரில் சொதப்பினாலும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி இருவரின் கூட்டணியில் “தென் மேற்குப்பருவக்காற்று,” “இடம் பொருள் ஏவல்”, “தர்மதுரை” ஆகிய படங்களுக்கு அடுத்து “மாமனிதன்” படம் உருவானது. 2018ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டே முடிவடைந்தது. இப்படத்தைத் தயாரித்துள்ள யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக கூறப்பட்டது. […]

Continue reading …

பல்லாங்குழி ஆடிய பூட்டான் வீராங்கனைகள்!

Comments Off on பல்லாங்குழி ஆடிய பூட்டான் வீராங்கனைகள்!

பூட்டான் வீராங்கனைகள் செஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்த இடத்தில் பல்லாங்குழி விளையாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் விளையாட வந்த பூட்டான் நாட்டின் வீராங்கனைகள் ஓய்வு நேரத்தில் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் இனத்தின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டை பூட்டான் […]

Continue reading …

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்?

Comments Off on அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக போட்டியிடுபவர் பற்றிய தகவலை கூறியுள்ளார். பாஜக பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது மழைக்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் குரல் கொடுத்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார். பாஜகவில் 70 வயதிற்கு மேற்பட்ட […]

Continue reading …

பத்திரிக்கை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!

Comments Off on பத்திரிக்கை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!
பத்திரிக்கை ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பேச்சு!

முதலமைச்சர் மலையாள மனோரமா பத்திரிகையின் 75 வது ஆண்டுவிழாவில் நியூஸ் கருத்தரங்கில் மாநில அரசுகளை தன்னிறைவாக வைத்திருந்தால் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, “75ம் ஆண்டு கொண்டாட்டம் என்பது வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், அடுத்த வளர்ச்சிக்கான திட்டமிடலாக இருக்கவேண்டும். மாநில அரசுகள் தன்னிறைவாகக இருந்தால்தான் இந்தியா வலிமையுடன் இருக்கும். ஒரு மாநிலம் தன்னிறைவு பெறுகிறது என்றால் அம்மாநிலம் வளார்ச்சியடைகிறது என்று அர்த்தம். இது மாநிலங்களின் வளர்ச்சி நாட்டை வளப்படுத்தும், பலப்படுத்தும். […]

Continue reading …

“பொன்னியின் செல்வன்” பாடல் ரிலீஸ்!

Comments Off on “பொன்னியின் செல்வன்” பாடல் ரிலீஸ்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியுள்ளார். இப்பாடலை இளங்கோ லட்சுமணன் என்பவர் எழுதியுள்ளார். “பொன்னி நதி” என்று தொடங்கும் பாடல் இணையதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்திய […]

Continue reading …

5ஜி அலைக்கற்றை ஏலத்தை கைப்பற்றிய ஜியோ!

Comments Off on 5ஜி அலைக்கற்றை ஏலத்தை கைப்பற்றிய ஜியோ!

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்துள்ளது. அதன்படி ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 4ஜி சேவைகள் பிரபலமானதால் இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகிறது. இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. அவ்வகையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி 5 […]

Continue reading …

ரெட் அலர்ட்!

Comments Off on ரெட் அலர்ட்!

3 நாட்களுக்கு அதிகமான கனமழைக்கான வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழகத்திற்கு விடுக்கப்பட்டள்ளது. தற்போது மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும். ஆகையால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க போக […]

Continue reading …