Home » Entries posted by Shankar U (Page 488)
Entries posted by Shankar

சென்னையில் 2வது விமான நிலையம்!

Comments Off on சென்னையில் 2வது விமான நிலையம்!

சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். சென்னை மக்கள் பல ஆண்டுகளாக இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருந்தது. இந்த நான்கு இடங்களில் பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களில் மத்திய அரசு பரிசீலனை செய்தது. இவற்றில் ஒன்றில் சென்னையின் இரண்டாவது […]

Continue reading …

ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

Comments Off on ஒலிம்பியாட்டில் பறந்த தாலிபன் கொடி!

சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுகளுக்கு ஆப்கானிஸ்தான் உட்பட 199 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வந்துள்ளனர். ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள், தலிபான் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி, அதிகாரப்பூர்வமான முன்னாள் ஆப்கானிஸ்தான் குடியரசின் முன்னாள் மூவர்ணக் கொடியின் கீழ் சர்வதேச விளையாட்டு போட்டியில் விளையாடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சியின் இயக்குநர் ஜெனரலும், உளவுத்துறையின் செயல் இயக்குநரும், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் கலாச்சார ஆணையத்தின் துணைத் தலைவருமான அகமதுல்லா வாசிக், குழு உறுப்பினர்களில் […]

Continue reading …

அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Comments Off on அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னை, ஜூலை 29- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரனுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சூளையில், சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோயில் அமைந்துள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களை, குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து புகார் அளித்து, சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த […]

Continue reading …

மீண்டும் இணையும் கமலஹாசன் – உதயநிதி!

Comments Off on மீண்டும் இணையும் கமலஹாசன் – உதயநிதி!

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்“ திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு இத்திரைப்படம். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப […]

Continue reading …

72 துண்டுகளாக மனைவியை வெட்டிய கணவனுக்கு ஜாமீன்!

Comments Off on 72 துண்டுகளாக மனைவியை வெட்டிய கணவனுக்கு ஜாமீன்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மனைவியை 72 துண்டுகளாக வெட்டிய கணவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2010ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் மனைவியைக் கொன்று அவரது உடலை 72 துண்டுகளாக குலாட்டி என்பவர் வெட்டியுள்ளார். இவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தண்டனை பெற்று வரும் குலாட்டிக்கு […]

Continue reading …

ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்!

Comments Off on ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சேர்க்கைக்கு நாளை கடைசி நாள்!

கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நாளையுடன் கடைசி நாள் என்பதால் அரசு கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிளஸ் டூ, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. ஏற்கனவே 5 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாளையுடன் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பொறியியல் கல்லூரியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர்களும், […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டுக்கு 2ஆயிரம் சிம்கார்டு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டுக்கு 2ஆயிரம் சிம்கார்டு!

செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்காக 2 ஆயிரம் சிம்கார்டுகள் 5ஜி இன்டர்நெட் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிகிறது. இந்நிலையில் இப்போட்டிக்காக 5ஜி இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்களுக்காக 2000 சிம்கார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 300 செஸ் […]

Continue reading …

ஒடிசாவில் ஆசிரியர் கைது!

Comments Off on ஒடிசாவில் ஆசிரியர் கைது!

ஒடிசாவில் ஆசிரியர் மாணவர்களை அடித்ததால் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணித ஆசிரியர் சரமாரியாக அடித்துள்ளார். இதில் 14 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு மாணவர்களுக்கு காயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யதுள்ளனர். மேலும் அந்த […]

Continue reading …

செஸ் ஒலிம்பியாட்டுக்கு நடிகர்கள் அழைப்பு!

Comments Off on செஸ் ஒலிம்பியாட்டுக்கு நடிகர்கள் அழைப்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், அஜீத், விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. தமிழக அரசு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக காட்சி தருகிறது. செஸ் […]

Continue reading …

ரிலையன்ஸ் நடிகர் விஜய்யுடன் ஒப்பந்தம்!

Comments Off on ரிலையன்ஸ் நடிகர் விஜய்யுடன் ஒப்பந்தம்!

ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் ஒப்பந்தம் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், “வாரிசு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய்க்கு சென்னை சாலிகிராமத்தில் ஷோபா திருமணம் மண்டபமும் போரூரில் சங்கீதா திருமண்டபம் உள்ளன. இந்த இரு மண்டபங்களை தில்ராஜூ ஒரு ஒப்பந்தம்போட்டு, மாதம் ரூ.7 லட்சம் வாடகை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. தில் […]

Continue reading …