
அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் “டைரி” திரைப்படத்தின் டிரையிலரை கமலஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகிய மூவரும் வெளியிட்டுள்ளனர். “வம்சம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாவர் அருள்நிதி. அதன்பின், இவர் நடிப்பில் வெளியான “டி ப்ளாக்” மற்றும் “தேஜாவு” ஆகிய திரைப்படங்கள் திரில்லிங் ஜர்னலில் அமைந்து ரசிகர்களைக் கவர்ந்தது. தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படமான “டைரி”யின் டிரையிலரை இன்று நடிகர் கமல்ஹாசன், அமீர்கான், விக்ரம் ஆகியோர் வெளியிட்டனர். Five Star Creations தளத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி சமூக வலைதளங்களில் […]
Continue reading …
சர்வதேச விண்ªªளி நிலையத்திலிருந்து மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதல் தொடர்ந்து 150 நாட்களைத் தாண்டியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ரஷ்யா போரிட்டு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷியாவின் ஒத்துழைப்பை பாதிக்கும் என ரஷ்யா விண்வெளி ஆய்வு நிறுவனமாக ரோஸ்கோஸ்மாஸ் எச்சரித்தது. […]
Continue reading …
நடிகை, பாடகி என சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். “7ம் அறிவு” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து “3”, “புலி”, “வேதாளம்” உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். “கேஜிஎப்” திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில் பிரபாஸுடன் ஜோடியாக “சலார்” என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவாகிறது. இந்த செய்தியை அவரது சமூக வலைதள பக்கத்தில் “நான் சினிமாவில் […]
Continue reading …
2005ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார். இப்படத்தில் வடிவேலுவின் காமெடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் ஆசியுடன் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார், படத்தில் வடிவேலு நடிக்கவில்லை. நடிகை மகிமா நம்பியார் இக்கூட்டணியில் இணைந்துள்ளார்.
Continue reading …
திரவுபதி முர்மு இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். பதவியேற்ற பின் உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகளை குறிப்பிட்டார். குறிப்பாக அவர் தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரை குறிப்பிட்டார். “வேலு நாச்சியார், ராணி லட்சுமிபாய் ஆகியோர்கள் புதிய உயரங்களை அளித்துள்ளனர். மேலும் உங்களின் நம்பிக்கையும் ஆதரவும் என்னுடைய மிகப்பெரிய பலமாக இருக்கும். கோடிக்கணக்கான நாட்டு மக்களின் […]
Continue reading …
தமிழக அரசு மின்சார மீட்டருக்கும் ரூபாய் 350 வாடகை வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ள அறிக்கையில், “மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அத்துடன் மின்சார மீட்டருக்கு வாடகை வசூலிக்கவும் தீர்மானித்துள்ளது. நகர்ப்புற வீடுகளில் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டர்களுக்கு 2 மாதங்களுக்கு ரூ.120 வீதமும், இனி பொருத்தப்படவுள்ள ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ரூ.350 வீதமும் வாடகை வசூலிக்கப்படவுள்ளது. இது […]
Continue reading …
இசைஞானி இளையராஜா எம்.பி. ஆக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். “இளையராஜா எனும் நான்” – ‘கடவுளின் பெயரால்’ எனக்கூறி எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இருந்தபோது இசைஞானி இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக முன்மொழிந்தார். இதில் இளையராஜா அல்லாமல் மற்ற மூவரும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது எம்.பி ஆக […]
Continue reading …
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறுப்பு பதிவாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவிக்கு பல்கலைக் கழகத்தின் பொறுப்பு பதிவாளரான கோபியால் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் சேலம் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது செய்யப்பட்டிருப்பது பல்கலைக்கழக வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Continue reading …
பொறியியல் கல்லூரி மாணவி மாடியிலிருந்து கிழே விழுந்தது தற்கொலை முயற்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் முதல் மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடந்துள்ளது. இதில் மாணவி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயமடைந்த மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் […]
Continue reading …
தமிழில் “மாரி 2” திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் டோவினோ தாமஸ். சமீபத்தில் டோவினோ தாமஸ் நடித்த “மின்னல் முரளி” திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அதில் ஒரு படம்தான் “2493 FD.” இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்குள் முகமூடி அணிந்து நுழைந்த சிலர் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் […]
Continue reading …