Home » Entries posted by Shankar U (Page 495)
Entries posted by Shankar

உக்ரைன் பலி எண்ணிக்கை: ஐ.நா தகவல்

Comments Off on உக்ரைன் பலி எண்ணிக்கை: ஐ.நா தகவல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையேயான போர் 150 நாட்களை நெருங்கி உள்ளது. சிறிய நாடான உக்ரைன் மீது மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா போர்தொடுத்து பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக உக்ரைன் ராணுவ வீரர்களும் செயல்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதித்தும் ரஷியா உக்ரைன் மீதான போரிலிருந்து பின்வாங்கவில்லை. போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை உக்ரைனில் பொதுமக்கள் 5,110 உயிரிழந்துள்ளனர். 6,752 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரஷ்யா […]

Continue reading …

அமைச்சர் ராஜ்நாத்சிங் அக்னிபாத் பற்றி விளக்கம்!

Comments Off on அமைச்சர் ராஜ்நாத்சிங் அக்னிபாத் பற்றி விளக்கம்!

அமைச்சர் அக்னிபாத் நேர்காணலில் ஜாதி, மதம் கேட்கப்படுகிறதா? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்திற்கு ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தில் சேரும் இளைஞர்களிடம் ஜாதி மற்றும் மத சான்றிதழ்கள் கேட்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. “அக்னிபாத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக ஜாதி மதம் சான்றிதழ்களை கேட்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூறுபவை அனைத்து பொய்யான தகவல்” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார் தேவைப்பட்டால் மட்டுமே ஜாதி சான்றிதழ் […]

Continue reading …

ஹைபர் சோனிக் ஏவுகணை!

Comments Off on ஹைபர் சோனிக் ஏவுகணை!

ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனையிட்டது அமெரிக்கா. அதிபர் பைடன் தலைமையிலான ஆட்சி அமெரிக்காவில் நடக்கிறது. விண்வெளி, அறிவியல், தொழில்நுட்பம் என்று பல துறைகளிலும் முன்னிலையில் உள்ள நாடு அமெரிக்கா. தற்போதுஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்லும், ஹைபர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிற்குப் பின், அமெரிக்கா நடத்திய 3 வது ஹைபர் சோனிக் ஏவுகணை இதுவாகும். இவ்வகை ஏவுகணை வளிமண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

மீண்டும் ஒரு பிரம்மாண்டம்!

Comments Off on மீண்டும் ஒரு பிரம்மாண்டம்!

தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் ரஜினி மற்றும் கமலஹாசன். சூப்பர் ஸ்டாரும், உலகநாயகனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. பிற்காலத்தில் இருவரும் தனித்தனியே அவரவரது ஸ்டைலில் நடிக்க ஆரம்பித்தனர். இனிமேல் இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா நடிப்பில் “விக்ரம்“ திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. மீண்டும் லோகேஷ் இயக்கத்தில், கமலஹாசன் மற்றும் ரஜினி […]

Continue reading …

‘பொன்னியின் செல்வனின்’ புதிய வீடியோ!

Comments Off on ‘பொன்னியின் செல்வனின்’ புதிய வீடியோ!

மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் […]

Continue reading …

நியூஸ் பேப்பரில் பார்சலுக்கு தடை!

Comments Off on நியூஸ் பேப்பரில் பார்சலுக்கு தடை!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நியூஸ் பேப்பரில் உணவு பொருட்களை பார்சல் செய்து தருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். உணவகங்களிலும், டீக்கடைகளிலும் அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் வடை, பஜ்ஜி போன்ற உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். அச்சிடப்பட்ட நியூஸ் பேப்பரில் உணவுப் பொருள்களை பார்சல் செய்யும் போது அந்த எழுத்துக்களில் உள்ள வேதிப் பொருட்கள் உணவுப் பொருட்களில் கலந்து உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்றும் அவர் […]

Continue reading …

இளையராஜா பதவியை ஏற்காதது ஏன்?

Comments Off on இளையராஜா பதவியை ஏற்காதது ஏன்?

இசைஞானி இளையராஜாவுக்கு எம்பி பதவி அளிக்கப்பட்டது. ஆனால் அவர் இன்று பதவி ஏற்க வரவில்லை. இசைஞானியுடன் சேர்ந்து பிடி உஷா உள்ளிட்ட 4 பேர் நியமனம் எம்பிக்களாக அறிவிக்கப்பட்டனர். பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் ஆகியோர் இன்று 3 நியமன உறுப்பினராக பதவியேற்றனர். இளையராஜா தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்றுள்ளதால் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதனால் அவர் பதவி ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது ஆனால் அவர் விரைவில் இந்தியா திரும்பிவுடன் எம்பி பதவி […]

Continue reading …

குரங்கு அம்மையால் 2வது நபர் பாதிப்பு!

Comments Off on குரங்கு அம்மையால் 2வது நபர் பாதிப்பு!

குரங்கு அம்மை நோயால் ஏற்கனவே கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது இரண்டாவது நபர் ஒருவருக்கும் குரங்குஅம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை கூறுகையில் “குரங்கு அம்மை நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். வாயின் உள்பகுதியில் வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏற்கனவே ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த […]

Continue reading …

நடிகை வரலட்சுமிக்கு கொரோனா!

Comments Off on நடிகை வரலட்சுமிக்கு கொரோனா!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நொயின் தாக்கத்தில் மக்கள் சிக்கிக் கொண்டு தவித்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தோம்.   கடந்த சில நாட்களாகவே கொரோனா நொய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் உட்பட அரசியல் தலைவர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ் சினிமாவில், போடா போடி, சண்டக்கோழி -2, சர்க்கார் உட்பட பல படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமாருக்கு கொரொனா […]

Continue reading …

கள்ளக்குறிச்சி கலவரம்!

Comments Off on கள்ளக்குறிச்சி கலவரம்!

கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் இறப்பு பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மகள் குறித்து வழங்கு தொடர்ந்துள்ளனர். மாணவியின் இறப்புக்கு நியாயம் வேண்டி அப்பகுதியில் மிகப்பெரிய […]

Continue reading …