அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் சில மாற்றங்களை செய்துள்ளார். இது அவரது கட்சியினரிடத்தில் மட்டுமல்லாமல் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க இருவருக்குமிடையே போட்டிகள் இருந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக இருந்தார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் […]
Continue reading …இன்று பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரத யாத்திரையை காண ஒடிசாவில் குவிந்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஜெகந்நாதர் கோவிலில் நடைபெறும் ரதயாத்திரையை காண பல மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருவது வழக்கம். இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரதயாத்திரை தொடங்குகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் பூரியில் குவிந்துள்ளனர். தேரை வடம்பிடித்து இழுக்க மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொள்ளும் நிலையில் இடையூறுகள் இல்லாமல் தேரோட்டத்தை நடத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Continue reading …மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்வதற்கான செலவு ரூ.62 கோடி ஆகிறது என்று தகவல் அளித்துள்ளது. 2021-2022ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் உள்ள இரு அவை உறுப்பினர்களும் ரயில்களில் பயணித்த செலவு பற்றிய விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடப்பு எம்.பிக்களுக்கு முதல் வகுப்பு ஏசி பெட்டியிலும், முன்னாள் எம்.பிக்களுக்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியிலும் இலவசமாக பயணிக்க அனுமதி உள்ளது. இதற்கான கட்டணத்தை மத்திய அரசு ரயில்வேக்கு செலுத்தும். அவ்வகையில் கடந்த 5 ஆண்டுகளில் […]
Continue reading …உச்சநீதிமன்றம் நுபுர் சர்மா தான் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு பொறுப்பு என்று அறிவித்துள்ளது. இன்று உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்து குறித்த வழக்கை விசாரித்தது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பலரும் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் வெவ்வேறு நீதிமன்றங்களிலும் […]
Continue reading …உலகப்புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அகாடமியில் சேர்வதற்காக நடிகர் சூர்யாவுக்கும் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் புகழ்பெற்ற, ஆஸ்கர் விருதை பெற இந்திய சினிமா பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆண்டு சூர்யாவின் “சூரரை போற்று” ஆஸ்கர் விழாவுக்கு அனுப்பப்பட்டது. பரிந்துரைக்கு முன்னாள் இறுதி செய்யப்பட்ட 366 படங்களின் பட்டியலில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரை போற்று இருந்து, பின் வெளியேறியது. அதுபோல சூர்யாவின் “ஜெய்பீம்“ […]
Continue reading …நடனப்புயல் என்றழைக்கப்படும் பிரபுதேவா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக பல கோடிகளில் ஆல்பம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபபத்தில் பின்னணி பாடகர்கள் மற்றும் முக்கிய திரைப்பிரபலங்கள் ஆல்பம் உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் சில நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரின் ஆல்பங்களில் பங்காற்றியுள்ளனர். இப்போது நடனப்புயல் பிரபுதேவா நடிப்பில் ஒரு ஆல்பம் உருவாக உள்ளது. இந்த ஆல்பம் பிரம்மாண்டமாக ஒன்றரை கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இந்த பாடலை இயக்கி, பிரபுதேவாவே […]
Continue reading …மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது “பொன்னியின் செல்வன்” திரைப்படம். மணிரத்னத்தின் கனவுப் திரைப்படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இருபாகங்களாக உருவாகி வருகிறது இத்திரைப்படம். இதன் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு விருந்தளிக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்போது செப்டம்பர் 30ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக […]
Continue reading …பணி நேரத்தில் இல்லாத அரசாங்க அதிகாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வில் ஈடுபட்டு பணியில் இல்லாத அரசாங்க ஊழியரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இத்தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவ்வகையில் ராணிப்பேட்டை கூட்ரோட்டில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அக்குழந்தைகள் நல மையத்தில் உள்ள அதிகாரி பணியில் இல்லாததால் உடனடியாக அவரை சஸ்பெண்ட் […]
Continue reading …தேர்தல் ஆணையம் குடியரசு தலைவர் தேர்தலுக்காக கொடுக்கப்பட்டுள்ள மனுவில் 79 மனுக்கள் நிராகரிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி சார்பில் திரபுபதி முர்மு மற்றும் எதிர்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த், சின்ஹா ஆகியோரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டிடுகின்றனர். இத்தேர்தலில் மொத்தம் 87 பேர் போட்டியிடுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதில் 79 மனுக்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் […]
Continue reading …செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பல நாடுகளிலிருந்தும் இந்த போட்டியில் செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் இந்த ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழாவை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி […]
Continue reading …