
மேயர் பிரியா ராஜனிடம் திமுக கவுன்சிலர் நேற்று நடைபெற்ற மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2 மணி நேரத்திலேயே முடிவடைந்தது. இக்கூட்டத்தில் 200 கவுன்சிலர்களில் 17 பேருக்கு மட்டும் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டது. பலருக்கும் கேள்வி கேட்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசினார். கொரோனா தொற்று காரணமாக விரைவாக கூட்டத்தை நடத்தி […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்ததாக தொடர்ந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.பி.அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு […]
Continue reading …
காஷ்மீர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்கள் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டில்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் […]
Continue reading …
பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகரின் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த திரைத்துறையையும் பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகி இன்று தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருப்பவர் மீனா. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா நோய் தொற்றால் […]
Continue reading …
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார் அட்லி. தற்போது இப்படத்தின் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அட்லி & ஷாருக்கான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன், நடிகை தீபிகா படுகோனே மற்றும் தெலுங்கு நடிகர் ராணாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Continue reading …
“பாகுபலி” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பிரபாஸ். இத்திரைப்படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தற்போது இவர், “ஆதிபுரூஸ்,” “சலார்” உட்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு திரைப்படத்தில் நடிக்க இவர் சுமாராக ரூ.100 கோடி பெறுகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “ஷாகோ”, “ராதே ஷ்யாம்” ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ஓம்வுத் இயக்கத்தில் பிரபாஸ், சாயிப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் “ஆதிபுரூஸ்” படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.120 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா […]
Continue reading …
டுவிட்டரின் நிர்வாகக் குழு எலான் மஸ்க்கிடம் டுவிட்டர் நிறுவனத்தின் ஒப்புதலை வழங்கி உள்ளது. உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். டுவிட்டர் சமூக வலைதளத்தை ரூ.3.43 லட்சம் கோடிக்கு வாங்குவதாக அறிவித்தார். இதனால், உலகமே இது குறித்து பேசிக் கொண்டிருந்தது. டுவிட்டர் நிறுவனப் பங்குகள் உயர்ந்தன. இந்நிலையில், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது டுவிட்டர் நிர்வாகக் குழு. ஏற்கனவே, டுவிட்டர் நிறுவனத்தில் அதன் […]
Continue reading …
“ருத்ரன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாக “ருத்ரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படம் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமென்று […]
Continue reading …
இந்த ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 4 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “கோப்ரா” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதியும், “பொன்னியின் செல்வம்“ திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதியும், பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்” திரைப்படமும், சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஆகிய நான்கு படங்களும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இந்த ஆண்டு ரிலீஸ் ஆகப்போகிறது. இதனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் சந்தோஷத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
Continue reading …
புதுடில்லி அரசு நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு பிரச்னை பெரிதாகவே உள்ளது. பள்ளி மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. குளிர்காலத்தில் வாகனங்களின் புகையும் சேர்ந்து அடர்த்தியான புகை மண்டலமாக மாறி மக்கள் சுவாசிக்கவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லி அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் எதிர்வரும் […]
Continue reading …