
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை இன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஒரு நாள் முன்னதாகவே விஜய்யின் அடுத்த படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டள்ளனர். வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம் விஜய்66. இப்படத்திற்கு “வாரிசு” என்று, the boss returens என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில், விஜய் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய்யின் பிறந்த நாளான இன்று மற்றொரு போஸ்டர் வெளியாகி […]
Continue reading …
நேற்று இரவு பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பாக்திக்கா மற்றும் கோஸ்ட் நகரத்தின் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. இந்த நிலக்கடுக்கம் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் அதிகளவில் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் மவ்லாவி ஷபருதின் அளித்த தகவலில், இதுவரை 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 610க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]
Continue reading …
திருமாவளவனுக்கு பாஜக வேட்பாளராக பழங்குடியின பெண் திரௌபதி முர்முவை நிறுத்தியுள்ளதால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருமாவளவன் பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்போது திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வி. முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு […]
Continue reading …
ஓபிஎஸ். ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தை போராட்டக் களமாக மாற்றி உள்ளனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்கதையாக மாறி உள்ளது. அதிமுக கட்சியிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கூறி வருகிறது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணி அதை மறுத்து வருகிறது. நாளை நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்நியலையில் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு […]
Continue reading …
நடிகை கங்கனா இந்திரா காந்தியின் வேடத்தில் இருப்பது போல் சமுக வலைதளங்களில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. கங்க்னா ரனாவத் சமீபத்தில் “தலைவி” படத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். இப்படம் ரசிர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்து அவர் இந்திரா காந்தி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுபற்றி முன்னர் அவர் பேட்டி ஒன்றில் […]
Continue reading …
தயாரிப்பு நிறுவனங்களில் பெருமை வாய்ந்த ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் குடும்பத்தினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் “சிவாஜி”. இத்திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தமிழ் சினிமா கொண்டாடி கொண்டிருக்கிறது. தற்போது ஏவிஎம் சரவணன் தன் குடும்பத்துடன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Continue reading …
விக்னேஷ் சிவன் தன் நண்பனான நெல்சனை டுவிட்டரில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. இயக்குனர் விக்னேஷ் இந்த போஸ்டரை பகிர்ந்து தனது நண்பரான நெல்சனை “வா நண்பா வா தலைவரோர பெஸ்ட் பிலிம்-ஆ இது […]
Continue reading …
பிரபல நடிகை கியாரா அத்வானி தனது காதலருடன் பிரேக் அப் என்று கூறப்பட்ட நிலையில் அவரது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. நடிகை கியார அத்வானி இந்தி சினிமா உலகில் பிரபலமானவர். இவர் ஷங்கர் இயகத்தில் ராம்சரண் நடிக்கும் பிரம்மாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், இவரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். ஆனால், திடீரென்று இவர்களின் காதல் பிரெக் ஆப் ஆனதாக தகவல்கள் […]
Continue reading …
ஒரே நாளில் ஒரு ரயிலில் மட்டுமே டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பீகாரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சாகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் பயணித்தவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பலரும் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிய […]
Continue reading …
ஆன்லைன் சூதாட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் 24வது தற்கொலை நடந்தேறி உள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழ்ந்துள்ள தற்கொலைகள் குறித்து பேசும்போது, “சென்னை மணலியைச் சேர்ந்த நடராஜ் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் […]
Continue reading …