
ஸ்காட்லாந்தில் நிலநடுக்கம், கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பதற்கு எலிகளை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் பேரிடர் நடக்கும் இடத்தில் மக்கள் இருக்கும் இடத்தை அறிவதற்கு எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களாலும், தொழில்நுட்ப தவறுகளாலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து விழும் சம்பவங்கள் அனைத்து நாடுகளிலும் நடந்து வருகின்றன. இவ்வாறாக கட்டிடங்கள் இடியும்போது மக்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பது மீட்பு குழுவுக்கு சவாலான காரியமாக இருந்து […]
Continue reading …
இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு நபிகள் நாயகம் குறித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுத்த பின்பும் உள்நோக்கத்துடன் பேசுவதாக இந்தியா அறிவித்துள்ளது. சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கண்டனம் தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிப்பதாக ஹேஷ்டேகுகளை டிரெண்ட் செய்ய தொடங்கினர். பாஜக இதுகுறித்து விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, மட்டுமல்லாமல் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை […]
Continue reading …
அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்றும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை கட்டமாயமாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை […]
Continue reading …
தற்போது சமீபத்தில் வெளியாகி ஹாட் ஆப் த டாப்பிக்காக பேசப்பட்ட திரைப்படம் “மாநாடு.” அதிலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இன்னும் பேசப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. நடிப்பில் ஆர்வம் அதிகமானதால் இயக்கத்தை விட்டு நடிகரானார். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் அவர் “இறைவி” படத்தின் மூலம் பழையபடி புல் பார்முக்கு வந்தார். இம்முறை கதாநாயகனாக […]
Continue reading …
“விக்ரம்” திரைப்படத்தில் நடித்தது பற்றி நடிகர் சூர்யா டுவிட்டரில் தனது பதிவை வெளியிட்டள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த “விக்ரம்“ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹாட் ஆப் த டாப்பிக்காக மாறியுள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீசாகும் முதல் படம் “விக்ரம்”. இத்திரைப்படம் கமல்ஹாசனின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக பேன் இந்தியா திரைப்படமாக ரிலீசாகி உள்ளது. இப்படத்தில் […]
Continue reading …
சமீபத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் சேர்ந்து நடித்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை சமந்தாவிற்காக பார்த்தவர்கள் தான் ஏராளம். இதைதொடர்ந்து அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இப்போது அவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முன்னதாக நாகார்ஜுனாவுக்கு பதிலாக சில எபிசோட்களில் சமந்தா பங்குபெற்றார் என்பது […]
Continue reading …
சென்னை போக்குவரத்து காவல் துறை கடந்த 50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபற்றி சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பதிவில், “வரலாறு காணாத வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கடந்த 50 நாட்களில், ரூ. 6,50,22,770 அபராதம் வசூல். ரூ.1,19,12,000- அபராதம் 1181 நபர்களிடமிருந்து குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வசூல். 274 முறை ஒரே வாகனம் அதிகபட்ச விதிமீறல். முழு அபராதமும் வசூல். 67 வாகனங்கள் 100க்கும் […]
Continue reading …
குஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். இச்செய்தி பெரும் வைரலாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் பலரது தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் வலுத்துள்ளது. ஷாமா பிந்து என்பவர் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர். சோசியாலஜியில் பட்டப்பட்டிப்பு முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சிறுவயது முதலே திருமணத்தின் மீது ஆர்வமில்லாமல் இருந்து வந்த ஷாமாவுக்கு மணமகளை போல அலங்காரம் செய்வதும் பிடித்துள்ளது. இதனால் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள எடுத்த […]
Continue reading …
அம்மா உணவகத்தின் மூலம் சென்னையில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்க ஏற்பாடு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் பள்ளிகள் ஆரம்பிக்க உள்ளது. அன்று முதல் இவ்வகுப்புகளுக்கு அட்மிஷன் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே அட்மிஷனுக்கு தேவையான டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலை பள்ளி வரை 281 அரசு […]
Continue reading …
பெண் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கும், கருமுட்டைகள் விற்பதற்கும் பெற்ற தாயே உடந்தையாக இருந்த சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. கணவனை பிரிந்து தனியான வாழ்ந்துள்ள பெண் ஒருவருக்கு 16 வயதில் மகள் இருந்துள்ளார். அப்பெண்ணுக்கு வேறோரு ஆணுடன் பழக்கமிருந்துள்ளது. ஆண் நண்பருடன் உல்லாசமாக இருக்க தன்னுடைய கருமுட்டைகளை மருத்துவமனையில் விற்று வரும் பணம் சம்பாதித்துள்ளார். இவரோடு மட்டுமில்லாமல் அவரது 16 வயது மகளின் கருமுட்டைகளையும் மருத்துவமனையில் விற்க தொடங்கியுள்ளார். சிறுமிக்கு 20 வயது என போலியாக ஆதார் கார்டை தயார் […]
Continue reading …