Home » Entries posted by Shankar U (Page 525)
Entries posted by Shankar

பெண் அதிகாரி வெட்டு!

Comments Off on பெண் அதிகாரி வெட்டு!

அரசு பெண் அதிகாரி ஒருவரை இளநிலை உதவியாளரே அரிவாளால் வெட்டியுள்ளார். தேனியில் பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ராஜராஜேஸ்வரி (வயது 50) திட்ட அலுவலராக பணியாற்றி வருகிறார். இளநிலை உதவியாளராக உமாசங்கர் (40) என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இன்று பகல் 1.30 மணியளவில் திட்ட அலுவலகத்துக்கு வந்துள்ளார் உமாசங்கர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ராஜராஜேஸ்வரியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு ராஜராஜேஸ்வரியை உமாசங்கர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. […]

Continue reading …

இனி கைரேகைக்கு பதில் கண்கருவிழி

Comments Off on இனி கைரேகைக்கு பதில் கண்கருவிழி

அமைச்சர் சக்கரவாணி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இனி கைரேகைக்கு பதில் கண் கருவிழி கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியபோது, “தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் அரிசி கடத்தல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஆலோசனை செய்யப்பட்டு, ரேஷன் அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக […]

Continue reading …

மாயமான விமானம்

Comments Off on மாயமான விமானம்
மாயமான விமானம்

நேபாளத்தில் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய விமானம் திடீரென காணாமல் போனது. ஆனால் அவ்விமானம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை 9 மணிக்கு நேபாளத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் 19 பயணிகள் மற்றும் மூன்று ஊழியர்கள் இருந்துள்ளனர். இவ்விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களிலேயே தொடர்பு கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து இவ்விமானத்தை தேடும் பணி நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சற்று முன் நேபாளத்தில் மாஸ்டாங் அருகே கோவாங் என்ற பகுதியில் மாயமான விமானம் […]

Continue reading …

வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிவிப்பு!

Comments Off on வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிவிப்பு!

ஆண்டுதோறும் விவசாயம் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு தண்ணீர் அதிக அளவு தென்மேற்கு பருவமழையின் மூலமாகவே கிடைக்கிறது. அப்படியிருக்க இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. ஆனால் கணித்த நாட்களுக்கு மாறாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Continue reading …

ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

Comments Off on ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் ஒரு பயங்கரவாத குழுக்கள் ஒரு கிராமத்தையே சூறையாடியுள்ள சம்பவம் நடந்தேறி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தோன்றி அபாயகரமான அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகளை அடக்க முடியாமல் புர்கினா பாசோ ராணுவமும் திணறி வருகிறது. அந்நாட்டின் கோம்பியா மாகாணத்திற்குள் புகுந்த பயங்கரவாத கும்பல் ஒன்று நள்ளிரவில் கிராமத்தையே சூறையாடியுள்ளது. அங்கிருந்த பொருட்களை அள்ளிக் கொண்டு […]

Continue reading …

மும்பை பள்ளியின் புதிய முயற்சி!

Comments Off on மும்பை பள்ளியின் புதிய முயற்சி!

மும்பையில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் தாங்கள் விரும்பியது போல சீருடை அணியலாம் என்று அறிவித்துள்ளது. இம்முயற்சிக்காக அப்பகுதியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் சீருடை ஒன்றாக இருக்கம். பள்ளிகளில் தீர்மானிக்கும் சீருடையை மட்டுமே மாணவ மாணவிகள் அணிந்து வருவார்கள். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஆதித்ய பிர்லா வேர்ல்டு அகாடமி என்ற பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்கர்ட், பேண்ட் என எந்த சீருடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் […]

Continue reading …

அமீர்கான் பட டிரெயிலர்!

Comments Off on அமீர்கான் பட டிரெயிலர்!

நடிகர் அமீர்கானின் புதிய படம் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் இறுதி போட்டியில் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாக உள்ளது. ஹாலிவுட்டில் கடந்த 1994ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் பெரும் கவனம் பெற்ற படம் “பாரஸ்ட் கம்ப்” இத்திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்தார். 27 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படத்தில் இந்தி நடிகர் அமீர்கான் இந்தியில் நடிக்கிறார். படத்திற்கு “லால் சிங் சத்தா” என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் கரீனா கபூர், நாகசைதன்யா உட்பட பலர் நடித்துள்ள […]

Continue reading …

வங்கி கணக்குகளில் கோடியில் வரவு!

Comments Off on வங்கி கணக்குகளில் கோடியில் வரவு!

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ.13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள எச்டிஎப்சி வங்கியின் கிளையின் 100 வாடிக்கையாளர்களின் கணக்கில் திடீரென தவறுதலாக ரூ.13கோடி ரூபாய் வரவாக வைக்கப்பட்டு உள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தவறை கண்டறித்த வங்கி கிளை உடனடியாக சம்பந்தபட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் வங்கி கணக்குகளில் வரவானதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Continue reading …

மத்திய அமைச்சகம் எச்சரிக்கை!

Comments Off on மத்திய அமைச்சகம் எச்சரிக்கை!

இனிமேல் ஒரிஜினல் ஜெராக்ஸை எங்கும் தர வேண்டாம் என மத்திய அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் ஆதார் கார்டுகளை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆதார் கார்டு என்பது அவசியமாக்கப்பட்ட நிலையில் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளிலும் ஆதார் கார்டு உறுதிப்படுத்ப்பட்டு வருகிறது. தற்போது மத்திய டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி எங்கும், எதற்கும் ஆதார் ஒரிஜினலின் நகலை தர வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது. […]

Continue reading …

ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி எச்சரிக்கை!

Comments Off on ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி எச்சரிக்கை!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் விழிப்புணர்வு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மக்களிடையே ஆன்ட்ராய்டு போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. தன்னிடமிருந்த பணத்தை மட்டும் இழந்தது போதாமல், பலர் கடன் வாங்கி விளையாடி ஏமாந்து, கடனையும் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு “சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு […]

Continue reading …