Home » Entries posted by Shankar U (Page 537)
Entries posted by Shankar

மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை உத்தரவு!

Comments Off on மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை உத்தரவு!

மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியை தடை செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோதுமை விலை ஏறிக்கொண்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கோதுமை ஏற்றுமதி தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பிற […]

Continue reading …

டெல்லி தீ விபத்தில் 30 பேர் பலி!

Comments Off on டெல்லி தீ விபத்தில் 30 பேர் பலி!

டெல்லியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 30 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரையிலும் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு சிலர் காயமடைந்துள்ளதாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]

Continue reading …

கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் சந்திப்பு!

Comments Off on கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் சந்திப்பு!

கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை […]

Continue reading …

கல்விக்கொள்கை பின்பற்ற தயார்!

Comments Off on கல்விக்கொள்கை பின்பற்ற தயார்!

உயர் கல்வி அமைச்சர் பொன்முடி புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை பின்பற்ற தயார் என்று அறிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்ற தயாராக இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் மாநில கல்வி கொள்கையையும் பின்பற்றி வருவோம். எங்கள் உணர்வுகளை கவர்னரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும் நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. இந்தி திணிப்பு தான் வேண்டாம் என்பதையே ஆளுநர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். சர்வதேச மொழியான […]

Continue reading …

எலெக்ட்ரிக் நிறுவன அதிகாரி ராஜினாமா!

Comments Off on எலெக்ட்ரிக் நிறுவன அதிகாரி ராஜினாமா!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவ்வப்போது திடீர் திடீரென ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரி திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் களை பொதுமக்கள் அதிக அளவு வாங்கி வரும் நிலையில் திடீர் திடீரென நாடு முழுவதும் பேட்டரி வெடித்து தீ பிடிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே எலெக்ட்ரிக் […]

Continue reading …

கொரோனாவினால் முதல் பலி, ஊரடங்கு அமல்!

Comments Off on கொரோனாவினால் முதல் பலி, ஊரடங்கு அமல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்பட்டது. ஆனால், வட கொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்முதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அந்த நபர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகியுள்ளதால் […]

Continue reading …

கமலஹாசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Comments Off on கமலஹாசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்ககியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் வைரலாகியுள்ளது. இப்பாடல் குறித்து […]

Continue reading …

வதந்தியால்தான் திருமணம் நடக்கவில்லை!

Comments Off on வதந்தியால்தான் திருமணம் நடக்கவில்லை!

“தலைவி” திரைப்படத்தின் கதாநாயகி நடிகை கங்கனா ரனாவத் தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்பபம் “தாகத்.” ரனாவத் இப்படத்தில் ஆக்சன் நடிகையாக நடித்துள்ளார். இப்படம் வரும் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் படத்தைப் போன்று நிஜ வாழ்விலும் நடந்து கொள்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நிஜத்தில் என்னால் யாரை அடிக்க முடியும்? ஆண்களை அடிப்பேன் என்று […]

Continue reading …

வரும் 28ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு!

Comments Off on வரும் 28ம் தேதி கருணாநிதி சிலை திறப்பு!

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் வரும் 28ம் தேதி திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிலையை திறந்து வைக்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வரும் 28ம் தேதி சென்னை வரவிருக்கிறார். இந்த சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் […]

Continue reading …

நோ ஒர்க் ப்ரம் ஹோம், 800 பேர் ராஜினாமா!

Comments Off on நோ ஒர்க் ப்ரம் ஹோம், 800 பேர் ராஜினாமா!

மும்பையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வொர்க் ப்ரம் ஹோம் வசதியை நிறுத்தியதால் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கொரொனாவினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒர்க் ப்ரம் ஹோம் முறையில் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் திடீரென அலுவலகத்திற்கு வர சொன்னதால் ஒட்டுமொத்தமாக ஊழியர்கள் அனைவரும் ராஜினாமா செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒயிட் ஹேட். இந்த நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒர்க் ப்ரம் […]

Continue reading …