காங்கிரஸ் கட்சி மேலிடம் முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது மட்டுமல்லாது அக்கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதுமாக அறிவித்திருக்கிறார். திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் […]
Continue reading …விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு அனுபவ அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவது உட்பட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளனர்.
Continue reading …“தி வாரியர்” என்ற படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படம் ‘தி வாரியர்’. இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 14ம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரெயிலர் மே 14ம் தேதி மாலை 5.31 […]
Continue reading …நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் நடிகர். தற்போது இவர் நடித்து வெளிவர காத்திருக்கும் படம் தான் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில், தன் ஒவ்வொரு படம் ரிலீஸாவதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் பெயரில் நடத்தி வரும் தாஸ் அறக்கட்டளை மூலம் எதாவதொரு சமூக சேவை செய்து வருகிறார். அதன்படி, இந்த முறை சிவகங்கை மாவட்ட மக்களின் சேவைக்காக ரூ.21 லட்சம் […]
Continue reading …“மஹா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஹன்சிகா மோத்வானியின் 50வது படமான “மஹா” படத்தின் ரிலீசாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஹன்சிகா மோத்வானி. ஆனால் அவருக்கான வாய்ப்புகள் நாளடைவில் குறைந்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான “மஹா”வில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க் கொண்டே இருந்த நிலையில் […]
Continue reading …பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் தினசரி நிகழ்வுகளாகிவிடும் என எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் பேசம்போது, “தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குரும்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்றவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இறந்த வெங்கடேஷையும் சேர்த்து தமிழ்நாட்டில் கடந்த 9 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது. எந்த சமூகக் கேடுகளையும் விட […]
Continue reading …உணவுப் பாதுகாப்பு அலுவலர் சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் 113 ஓட்டல்களில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 19 ஓட்டல்களில் சுமார் 133.8கிலோ கெட்டுப்போன சிக்கன், ஆட்டுக்கறி, மீன், நண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.34,650 ஆகும். சுகாதாரமற்றை முறையில் உணவுகளை தயார் செய்த 8 கடைகளுக்கு ரூ.13000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 22 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
Continue reading …இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கையில் 5 முறை பிரதமராகப் பதவியில் இருந்துள்ளார். இலங்கையில் நிலவிவரும் தொடர் பொருளாதார நெருக்கடியால் நிலைமை கைமீறியுள்ளது. இலங்கை முன்னாள் பிரதார் ராஜபக்சேவின் வீட்டை கொளுத்திய சிங்களர்கள், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களை அடித்தனர். இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் அரசு, தனியார் சொத்துகளை சேதப்படுத்துவோரை சுட்டுத்தள்ள முப்படைகளுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்தள்ளது. இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே […]
Continue reading …இலங்கை ரிசர்வ் வங்கியின் கவர்னர் இலங்கையின் பொருளாதார நிலை இதே ரீதியில் சென்றால் சோமாலியா ஜிம்பாப்வே போன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் பிரதமர் பதவி விலகி மூன்று நாட்களாகி விட்டது. ஆனால் இதுவரை புதிய பிரதமர் நியமிக்கப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் கடும் வீழ்ச்சியடையும். இதனை அடுத்து தான் தனது பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்றும் இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் […]
Continue reading …தென்னக ரயில்வே கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தென்னக ரயில்வே தமிழகம் உள்பட கேரளாவுக்கு இயக்கப்படும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் முதல் காயங்குளம் என்ற பகுதி வரை ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே […]
Continue reading …