Home » Entries posted by Shankar U (Page 54)
Entries posted by Shankar

ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு!

Comments Off on ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு!

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற துணைவேந்தர் தனது மகளுக்காக 100 பவுன் நகைகள் சேர்த்து வைத்திருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி சின்னமணி தெருவை சேர்ந்த சுகுமார் மீன்வளக்கல்லூரியில் துணைவேந்தராக பணியாற்றி பின் ஓய்வு பெற்றார். சுகுமார் வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்ற நேரம் பார்த்து மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த நூறு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுகுமார் சென்னையிலிருந்து திரும்பி வந்த பின் தனது வீட்டில் 100 பவுன் […]

Continue reading …

வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்!

Comments Off on வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்!

நேற்று குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழந்தான். குற்றால அருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குற்றாலத்தில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பழைய குற்றாலம் அருவியில் நூற்றுக்கணக்கானோர் நேற்று (17.05.2024) குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், அலறியடித்துக் கொண்டு ஓடினர். எனினும், குளிக்கும் பகுதியில் இருக்கும் கம்பிகளில் பலர் சிக்கிக் கொண்டனர். சிலர் வெள்ளப்பெருக்கில் இழுத்துச் […]

Continue reading …

ரணகளமான பாராளுமன்ற கூட்டம்!

Comments Off on ரணகளமான பாராளுமன்ற கூட்டம்!

இன்று தைவான் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பெண் எம்பிக்கள் உள்பட எம்பிக்கள் ஒருவரையொருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. சீன ஆதரவு பெற்ற கோமின் டாங் என்பவரை எதிர்த்து போட்டியிட்ட வில்லியம் சிங் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஆட்சி அமைக்க தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாராளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விவாதம் இன்று […]

Continue reading …

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்!

Comments Off on திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்!

பக்தர்கள் நீண்ட வரிசையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 கி.மீ. தூரம் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் சுவாமி தரிசனத்துக்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் […]

Continue reading …

5 ரூபாய் லஞ்சமா?

Comments Off on 5 ரூபாய் லஞ்சமா?

கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் விவசாயிகளுக்கு அரசின் வருவாய் ஆவணங்களை வழங்க 5 ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ஜாம்நகரிலுள்ள மோர்கண்டா கிராமத்தில் பஞ்சாயத்து போர்டு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக பணியாற்றியவர் நவீன் சந்திரா நகும் (46). இவரிடம் அரசின் வருவாய் ஆவணங்களைக் கேட்டு விவசாயிகள் மனு செய்தனர். அவர்களிடம் ஆவணங்களை வழங்க நவீன் சந்திரா 5 ரூபாய் லஞ்சம் கேட்டதாக […]

Continue reading …

கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது!

Comments Off on கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது!

அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் பேரில் டில்லி போலீசார் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் மாதம் மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக டில்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து வீடு திரும்பிய முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்திப்பதற்காக அக்கட்சியின் எம்பியான […]

Continue reading …

காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Comments Off on காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை எந்த அரசாங்கத்தினாலும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்து பேசியதாகவும் பல பாஜக தலைவர்களும் இதே போன்று பேசியும் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருந்து வருவதாகவும் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார். அரசியலமைப்பிற்கு எதிராக பேசுபவர்கள் மீது பிரதமர் […]

Continue reading …

இயந்திரக்கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Comments Off on இயந்திரக்கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

திருச்சி விமான நிலையத்தில் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு நோக்கி சென்றது. இந்த விமானத்தில் 167 பயணிகள் பயணித்த நிலையில், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள் இருவரும், திருச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சி விமான நிலையம் […]

Continue reading …

தென்காசியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்!

Comments Off on தென்காசியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்!

சுற்றுலா பயணிகள் தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கோடை விடுமுறை காரணமாக பலரும் பல ஊர்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். கோடை மழையும் பிடித்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. இன்று தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலரையும் தள்ளத் தொடங்கியுள்ளது. […]

Continue reading …

கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து!

Comments Off on கடற்கரை தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணிகள் காரணமாக கடற்கரையிலிருந்து தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே-18, 19 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continue reading …