Home » Entries posted by Shankar U (Page 544)
Entries posted by Shankar

உடுமலை அதிமுக பெண் கவுன்சிலர் மரணம்!

Comments Off on உடுமலை அதிமுக பெண் கவுன்சிலர் மரணம்!

அதிமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் திடீரென இன்று காலமானார். உடுமலை 7-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் ரம்யா என்பவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ரம்யா கடந்த சில நாட்களாக, நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறார். ரம்யாவை, கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். தகவல் அறிந்த உடுமலை, திருப்பூர் மாவட்ட அதிமுகவினர், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் […]

Continue reading …

சீமானின் கருத்து!

Comments Off on சீமானின் கருத்து!

சீமான் “மனிதனே மனிதனை பல்லக்கில் தூக்குவதா, அது இழிவான செயல்” என்று கூறியுள்ளார். தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் விவகாரம் மாபெரும் சர்ச்சையாகி பேசப்பட்டு வருகிறது.   தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி வருகிற மே 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் […]

Continue reading …

பள்ளிக்கல்வித்துறை சாதி அடையாள கயிறுகளுக்கு தடைவிதித்து உத்தரவு

Comments Off on பள்ளிக்கல்வித்துறை சாதி அடையாள கயிறுகளுக்கு தடைவிதித்து உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பள்ளிகளில் சாதியை அடையாளமிட்டு காட்டுவதற்காக கட்டப்படும் கயிறுகளுக்கு தடை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   சமீபத்தில் பள்ளிகளில் சாதி அடையாள கயிறு கட்டும் மோதல் காரணமாக நெல்லை அருகே உள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர் பலியானார். இந்த சம்பவத்தால் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலான கயிறுகளை மாணவர்கள் அணியக்கூடாது என்றும், சாதி அடையாள கயிறுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பள்ளி கல்வித்துறை […]

Continue reading …

டூடூடூ பாடல் வீடியோ ரிலீஸ்

Comments Off on டூடூடூ பாடல் வீடியோ ரிலீஸ்

காத்துவாக்குல ரெண்டு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஒரு ரவுண்ட் அடித்து வருகிறது.   விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் இப்படத்தில் நடித்துள்ளனர். வசூலிலிலும் ஓரளவுக்கு திருப்திகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இன்று சற்று முன்னர் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “டூடூடூ” பாடலின் வீடியோ வெளியாகியயுள்ளது. இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது. சமந்தா மற்றும் நயன்தாராவின் அசத்தலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் மற்றும் சுனிதி சௌஹான், சஞ்சனா கால்மாஞ்சே […]

Continue reading …

அதிர்ச்சியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள்!

Comments Off on அதிர்ச்சியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள்!

600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி. இதனால் அதன் வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாராக்கடன் காரணமாக நஷ்டம் அடைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி இந்த வங்கியை சீரமைக்கும் வகையில் 600 கிளைகளை மூட ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு […]

Continue reading …

காவலர்கள் இழந்த கோடிகள்!

Comments Off on காவலர்கள் இழந்த கோடிகள்!

சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கோடிக்கணக்கில் காவலர்கள் கிரிப்போடி கரன்சி மோசடியில் இழந்தது தெரியவந்துள்ளது. சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றறிக்கையில் கிரிப்டோகரன்சி மோசடியில் காவலர்களை கோடிக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த இரண்டு காவலர்கள் கிரிப்டோகரன்சி மோசடியில் ஒன்றரை கோடி ரூபாய் இழந்துள்ளதால், சமூக வலைதளங்கள் மூலம் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பவேண்டாம் எனவும், அவர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்க சுற்றறிக்கை […]

Continue reading …

குவிந்து வருகிறது எல்ஐசிக்கான பங்குக்கான விண்ணப்பங்கள்!

Comments Off on குவிந்து வருகிறது எல்ஐசிக்கான பங்குக்கான விண்ணப்பங்கள்!

பொதுமக்கள் எல்ஐசி ஐபிஓ வாங்குவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி எல்ஐசி ஐபிஓ பங்குகளை 95 சதவீத பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 22 கோடியே 11 லட்சம் பங்குகளை விற்க எல்ஐசி முடிவு செய்துள்ள நிலையில் 2-வது நாளான இன்று வரை 95 சதவீத விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பாலிசிதாரர்களுக்கு 10 சதவீத பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மூன்று மடங்கு விண்ணப்பங்களும் எல்ஐசி ஊழியர்களுக்கு 7 சதவீத பங்குகளை […]

Continue reading …

பார்த்திபனின் திரைப்பட உரிமையை பெற்ற தயாரிப்பாளர்!

Comments Off on பார்த்திபனின் திரைப்பட உரிமையை பெற்ற தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பார்த்திபன் நடித்து இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று இருக்கிறார். உலகிலேயே முதல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கம் திரைப்படம் தான் பார்த்திபன் நடித்த “இரவின் நிழல்”. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மக்களிடையே பலமடங்கு […]

Continue reading …

பெங்களூரு அணி கேப்டன் தோனிக்கு புகழாரம்!

Comments Off on பெங்களூரு அணி கேப்டன் தோனிக்கு புகழாரம்!

பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளஸ்சிஸ் “தோனி எங்கு இருக்கின்றாரோ அங்கு அவர் தான் கேப்டன்” என்று கூறியுள்ளார். சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி இன்று நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரை தோனியின் தலைமையில் விளையாடியை டூபிளஸ்சிஸ் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு தலைமையேற்று தோனியை எதிர்க்கவுள்ளார். இந்த போட்டி குரு சிஷ்யனுக்கு இடையே நடைபெறும் போட்டியாக கருதப்படுகிறது இந்நிலையில் தோனியின் சென்னை அணியுடன் மோதும் டூபிளஸ்சிஸ் பேட்டியில் கூறும் போது, “தோனி எங்கு […]

Continue reading …

பள்ளி மாணவர்களுக்காக அமைச்சர் அன்பில் மகேஷின் அறிவிப்பு!

Comments Off on பள்ளி மாணவர்களுக்காக அமைச்சர் அன்பில் மகேஷின் அறிவிப்பு!

அமைச்சர் அன்பில் மகேஷ் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தால் முதல் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரை முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக பல மாநிலங்களிலும் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் மற்றும் முன்கூட்டிய விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாட்டில் முதல் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரையிலான […]

Continue reading …