உலக நாடுகள் பலவும் மீண்டும் கண்டறியப்பட்டுள்ள எபோலா வைரஸினால் அதிர்ச்சி உள்ளாகி இருக்கிறது. கொரோனா பாதிப்பிலிருந்தே உலகம் முழுவதும் மீளாத நிலையில் மீண்டும் தற்போது எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு முன்னர் மக்களை உலுக்கிய மோசமான வைரஸ் தொற்றுகளில் முக்கியமானது எபோலா வைரஸ். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில ஆண்டுகளில் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட எபோலா […]
Continue reading …டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சமீபத்தில் விசாரணை கைதிகள் சிலர் காவல் நிலையத்தில் உயிரிழந்தனர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட இருவர் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் அவதிப்படும் மக்களுக்கு தேவையான உதவி செய்வதற்காக தாராளமாக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நன்கொடைகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் நன்கொடை வழங்க வேண்டிய வங்கி கணக்கு எண்ணையும் […]
Continue reading …அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னையில் நடப்படும் மரத்திற்கு ‘விவேக் மரம்’ என்ற பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு லட்சம் மரம் வைக்கப்படும் என்றும், ஒரு லட்சமாவது மரம் வைக்கப்படும்போது அந்த மரத்திற்கு விவேக் மரம் என்று பெயர் வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் இதுவரை 98,000 மரம் நடப்பட்டு உள்ளன. இன்னும் ஒரு சில நாட்களில் ஒரு லட்சம் மரம் நடப்படும் என்றும் ஒரு லட்சமாவது மரம் […]
Continue reading …ஏற்கனவே முதல் கட்டமாக நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. இன்றைய படப்பிடிப்புக்காக விஜய் ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் இத்திரைப்படத்தை வம்சி இயக்குகறி£ர். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாகிறார். விஜய்யின் தந்தையாக சரத்குமார், […]
Continue reading …பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற முதியவர் திடீரென உயிர்பெற்று எழுந்த சம்பவம் சீனாவில் ஷாங்காய் நகரில் நடந்துள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ள நிலையில் ஹாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்கள் பலர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ஷாங்காயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கருதப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்காக அவரை பிணவறை கொண்டு சென்றபோது உடலில் அசைவுகள் தெரிந்துள்ளன. […]
Continue reading …பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி “இனிய ரமலான் வாழ்த்துக்கள். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதர உணர்வை இந்த நல்ல தருணம் மேம்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும் வளமும் கிடைக்கட்டும்” என்று வாழ்த்தியுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில் பதிவில் “ரமலானையொட்டி நமது முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துகளை […]
Continue reading …ராகுல் காந்தி பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. குஜராத்தில் தேர்தல் வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு கூட போகாமல் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டியில் இருக்கும் படியான ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் சரியான தலைமை […]
Continue reading …சென்னை, மே 3: மளிகைப் பொருள் டெலிவரி சேவைகளுக்கு, டிரோன்களை ஸ்விக்கி நிறுவனம் பயன்படுத்த உள்ளது. இதற்காக, சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நம் நாட்டில், ஆன்லைனின் ஆர்டர் செய்யப்படும் உணவுகள் மற்றும் மளிகைப் பொருட்களை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் சேவையை, ஸ்விக்கி நிறுவனம் வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில், இந்த நிறுவனத்தின் டெலிவரி சேவைகளை, அதிக அளவிலான மக்கள் பயன்படுத்த துவங்கினர். இந்த சேவையின்கீழ், […]
Continue reading …மலையாளம், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர் சாய் பல்லவி. இவர் சேகர் கம்முலா இயக்கிய “லவ் ஸ்டோரி”, நானியுடன் “சியாம் சிங்க்“ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே ஹிட் ஆனது. தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீ நடிக்கும் “போலா சங்கர்” என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்குப்பதற்காக அவரை அணுகியிருக்கிறார்கள். ஆனால் தனக்கு அதில் நடிக்க விருப்பமில்லை என சாய்பல்லவி தெரிவித்துள்ளார். நடிகை சாய்பல்லவி திருமணத்திற்கு தயார் […]
Continue reading …