Home » Entries posted by Shankar U (Page 55)
Entries posted by Shankar

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை!

Comments Off on இன்றிரவு கொட்டப்போகுது கனமழை!

அக்னி நட்சத்தில் பொதுவாக வெயில் கொளுத்தும். ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமாக கோடை காலத்தில் தமிழக முழுவதும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது கடந்த இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், […]

Continue reading …

ஓடும் காரில் உதவி கேட்ட சிறுமி!

Comments Off on ஓடும் காரில் உதவி கேட்ட சிறுமி!

“காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்” என்று ஓடும் காரிலிருந்து 15 வயது சிறுமியின் கூச்சல் கேட்டு பொதுமக்கள் போலீசில் புகார் செய்துள்ள சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. சென்னை தி.நகர் அருகே ஓடும் காரில் திடீரென ஒரு சிறுமி உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த கார் சென்ற பாதையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த காருக்கு உரியவர் மகேந்திரன் என்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் […]

Continue reading …

அமலாக்கத்துறை குறித்து பிரதமர் பேட்டி!

Comments Off on அமலாக்கத்துறை குறித்து பிரதமர் பேட்டி!

பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை ‘யூஸ்லெஸ்’லாக இருந்தது, தற்போது திறம்பட செயல்படுகிறது. எனது ஆட்சியில் ரூ.2200 கோடி சொத்­துக்­களை பறிமுதல் செய்துள்ளது என்று கூறினார். எதிர்கட்சிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பாஜ பயன்படுத்துவதாக குற்றம் எழுந்துள்ளதற்கு பிரதமர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர், “அமலாக்கத்துறை என்பது முன்பு (காங்கிரஸ்ஆட்சியில்) ‘யூஸ்லெஸ்’லாக இருந்தது. பா.ஜனதா ஆட்சியில் தான் அது திறமையாக செயல்படவே துவங்கியது. அமலாக்கத்துறை தனது பணிகளை செய்கிறது. 2004 முதல் 2014 வரை சட்டமும், நடைமுறைகளும் ஒன்று தான். […]

Continue reading …

கல்வி கருணாநிதிமயம் ஆவதா? தமிழிசை கேள்வி!

Comments Off on கல்வி கருணாநிதிமயம் ஆவதா? தமிழிசை கேள்வி!

தமிழசை சவுந்தரராஜன் தமி­ழகத்தில் கல்வி கருணாநிதிமயம் ஆகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். நேற்று குடியாத்தம் அத்தி யோகா இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குமரி அனந்தனை பார்க்க மகள் தமி­ழிசை வந்தார். காட்பாடி ரயில் நிலை­யத்தில் செய்தியாளர்களிடம் தமிழிசை, “வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயண நேரமும் மிச்சமாகிறது. நடந்து முடிந்த 4 கட்ட தேர்தலிலேயே பாஜ ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைத்து விடும். இருந்தாலும், மக்களை சந்திக்க வேண்டும் […]

Continue reading …

டீசல் பரோட்டாவா? மன்னிப்பு கேட்ட யூடியூபர்!

Comments Off on டீசல் பரோட்டாவா? மன்னிப்பு கேட்ட யூடியூபர்!

மக்கள் பெரும்பாலும் பலவிதமான உணவு வகைகளை தேடி சென்று சாப்பிட தொடங்கியுள்ளனர். சண்டிகரில் ஒரு உணவகத்தில் டீசலை பயன்படுத்தி பரோட்டா செய்ததாக வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. தெருவோரங்களில் உள்ள உணவுக்கடை முதல் ஸ்டார் உணவகங்கள் வரை உணவு சார்ந்த விஷயங்களை பற்றி யூடியூப் சேனல்கள், இன்ஸ்டாக்ராம் பக்கங்களில் வீடியோ எடுத்து பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இதுபோன்ற வீடியோக்கள் மூலமாக வைரலாவதற்காக சில உணவகத்தை சேர்ந்தவர்களும் டான்ஸ் ஆடிக்கொண்டே சமைப்பது போன்ற சர்க்கஸ் வேலைகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், சாக்லேட்டில் […]

Continue reading …

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

Comments Off on நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

நாளை தொடங்கவிருந்த நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தற்போது வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து பிரதமர் மோடி டில்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பயணக் கட்டணமாக 7,670 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், தொடங்கிய இரண்டாவது நாளே கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாட்கள் என […]

Continue reading …

நிதி நிறுவனங்களில் ரூ.170 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

Comments Off on நிதி நிறுவனங்களில் ரூ.170 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிதி நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தனர். வருமான வரித்துறை மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள நிதிநிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள பண்டாரி பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் அலுவலகம் மற்றும் ஆதிநாத் அர்பன் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவற்றில் அதிரடி சோதனை […]

Continue reading …

சீதைக்கும் ஒரு கோவில்; அமித்ஷா வாக்குறுதி!

Comments Off on சீதைக்கும் ஒரு கோவில்; அமித்ஷா வாக்குறுதி!

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டியதை போல் சீதைக்கும் ஒரு தனியாக கோயில் கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற போது ராமர் கோவில் கட்டுவோம் என பாஜக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டு அயோத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ராமர் கோவில் திறக்கப்பட்டது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தல் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பல வாக்குறுதிகள் பாஜக […]

Continue reading …

ரூ.22 கோடி கொக்கைன் பறிமுதல்!

Comments Off on ரூ.22 கோடி கொக்கைன் பறிமுதல்!

22 கோடி மதிப்புள்ள கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதை பொருள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். நான்கு வெளிநாட்டவர் உள்ளிட்ட 5 பேரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் போதைப் பொருள் ஆங்காங்கே பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜாபர் சாதிக் என்ற திரை உலக பிரபலம் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவர் ரூ.2000 கோடி அளவுக்கு போதை […]

Continue reading …

இந்திய கடற்படையினரின் அதிரடி!

Comments Off on இந்திய கடற்படையினரின் அதிரடி!

அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற செய்தி தான் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது இலங்கை மீனவர்கள் 14 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 14 இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு சொந்தமான ஐந்து படகுகளை இந்திய கடற்படை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேர் அவர்களது படகுகளை நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கவுள்ளனர். எல்லை […]

Continue reading …