Home » Entries posted by Shankar U (Page 56)
Entries posted by Shankar

இளையராஜா இசைக் கச்சேரி டிக்கெட் அறிமுகம்!

Comments Off on இளையராஜா இசைக் கச்சேரி டிக்கெட் அறிமுகம்!

வரும் 2024 ஜுலை 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இசைஞானி இளையராஜாவின் நேரடி இன்னிசைக் கச்சேரி சென்னையில் நடைபெறுகிறது. இந்த இன்னிசை கச்சேரியை மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஒருங்கிணைக்கின்றனர். இசை விழா இதுவரை தமிழகம் கண்டிராத அளவில், சகல பாதுகாப்புகளுடன், அனைத்து வசதிகளுடனும் பிரம்மாண்டமாக நடத்தப்படவுள்ளது. இந்த இசை விழாவிற்கான டிக்கெட் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா, மெர்குரி மற்றும் அருண் ஈவண்ட்ஸ் நிறுவனங்களின் சார்பில் அமைப்பாளர்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் […]

Continue reading …

யூடியூப் சேனல்கள் குறித்து ஜிவி பிரகாஷ் வருத்தம்!

Comments Off on யூடியூப் சேனல்கள் குறித்து ஜிவி பிரகாஷ் வருத்தம்!

சமீபத்தில் சமூக வலைதளத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிய இருப்பதாக அறிவித்தார். அதேபோல் சைந்தவியும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இருவருமே தங்களுடைய அறிவிப்பில் பரஸ்பரம் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் எங்களுடைய தனி உரிமையை காப்பாற்றும் வகையில் ஊடகங்கள் நண்பர்கள் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் கேட்டுக் கொண்டனர். தங்கள் கற்பனை கதைகளை ஒரு சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் இஷ்டத்துக்கு ஓடவிட்டுள்ளனர். ஜிவி பிரகாஷ் மற்றும் […]

Continue reading …

அமைச்சர் அன்பில் மகேஷ் – இளையராஜா சந்திப்பு!

Comments Off on அமைச்சர் அன்பில் மகேஷ் – இளையராஜா சந்திப்பு!

இசைஞானி இளையராஜாவை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்ததாக அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்பதிவில் அவர், “தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று […]

Continue reading …

நடிகர் மன்சூர் அலிகானின் பதிவு வைரல்!

Comments Off on நடிகர் மன்சூர் அலிகானின் பதிவு வைரல்!

நடிகர் மன்சூர் அலிகான் சமூக வலைதளங்களில், “மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..! அதையும் தாண்டி கொடூரமானது!” என பதிவிட்டுள்ளார். இப்பதிவு தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த மாதம் 19ம் தேதி தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். வேலூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய […]

Continue reading …

கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி!

Comments Off on கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி!

பல கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் இந்த நடவடிக்கைக்கு கலெக்டர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2016ல் இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட காலத்தில் புதிய பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. அப்போது 10 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களும் வெளியிடப்பட்டன. அப்போது யாரோ அவை போலி என வதந்தியை பரப்பிவிட்டனர். 8 ஆண்டுகள் கடந்தும் பல ஊர்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாக்காசாகவே இருந்து வருகின்றன. அப்படியாக 10 ரூபாய் நாணயங்களையே இன்னும் மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. […]

Continue reading …

அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றத்தின் செக்!

Comments Off on அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றத்தின் செக்!

அமலாக்கத்துறை நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு நிபந்தனை விதித்துள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாமீன் மனு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம் அமலாக்க துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு சிறப்பு நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரை […]

Continue reading …

“ஸ்டார்” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

Comments Off on “ஸ்டார்” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

கடந்த வாரம் கவின் நடிப்பில் “ஸ்டார்” திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானதிலிருந்து படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த வாரம் கவின் நடிப்பில் ‘ஸ்டார்’ திரைப்படம் வெளியாகியது. படம் முதல் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் கவின் ஒரு ஸ்டார் நடிகராக உருவாகியுள்ளார். இத்திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பிருந்த நிலையில் படம் ரிலீசான […]

Continue reading …

“க்யூட்-யுஜி” தேர்வு டில்லியில் மட்டும் ஒத்திவைப்பு!

Comments Off on “க்யூட்-யுஜி” தேர்வு டில்லியில் மட்டும் ஒத்திவைப்பு!

தேசிய தேர்வு முகமை தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் இன்றைய க்யூட்-யுஜி தேர்வு நடைபெறுகிறது. டில்லியில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு படிக்க க்யூட்-யுஜி தேர்வு கட்டாயம். இன்று காலை நாடு முழுவதும் இத்தேர்வு நடைபெற்றது. ஆனால் டில்லியில் மட்டும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் இன்று நடைபெற இருந்த வேதியியல், உயிரியல், ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான தேர்வு மே 29ம் தேதி டில்லியில் நடைபெறும் என்றும் தேசிய […]

Continue reading …

பாஜகவுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

Comments Off on பாஜகவுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!

அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கிழித்து எறிய முயற்சித்தால், நாடும் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை என்ன செய்யும் என்பதை பாருங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம் பலங்கிரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழை பொது […]

Continue reading …

இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு?

Comments Off on இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு?

சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத முதல் ஐந்து நாட்கள் திறக்கப்படும். வைகாசி மாதம் பூஜைக்காக இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட இருப்பதாகவும் மே 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவில் நிர்வாகம் இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் நடை திறக்கப்பட்டது. 19ம் தேதி இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தினந்தோறும் காலை நெய் […]

Continue reading …