நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆன்ட்ரூ ரஸ்ஸல் கே.கே.ஆர் அணியை வெற்றி பெறவைத்தார். 15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக பஞ்சாப் அணி விளையாடியது. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ரஸ்ஸல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். அவரின் இந்த அதிரடி இன்னிங்ஸில் […]
Continue reading …தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் தான் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெறிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது. இப்படி இருக்கையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த […]
Continue reading …பால் மற்றும் கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. ஆம், கேஸ் மட்டுமின்றி கடந்த சில நாட்களாக தனியார் பால் விலை, டீத்தூள், காபிதூள், சர்க்கரை போன்றவற்றின் விலை தொடர்ந்து […]
Continue reading …“பீஸ்ட்” திரைப்படத்தின் கட் அவுட்டிற்கு விஜய் ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விஜய், பூஜா ஹெக்டே நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இதனிடையே “பீஸ்ட்” பட கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள் மற்றும் தடுக்க தவறிய நடிகர் விஜய் மீது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கபட்டது. தமிழ்நாடு பால்முகவர் […]
Continue reading …நாம் தமிழர் கட்சி சீமான் இன்று திருவொற்றியூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவொற்றியூர் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பை அதிகாரிகள் இடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது பொது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சென்றார். அங்கு அவர் அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்து […]
Continue reading …நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வு தொடங்கும் சூழலில் பிரதமர் மோடி மாணவர்களிடம் தேர்வு குறித்து நம்பிக்கையூட்டும் விதமாக பேசியுள்ளார். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் நடக்க இருக்கும் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தேர்வு குறித்த பயமும் மாணவர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்கும் விதமாக பரீக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களிடையே பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது பேசிய பிரதமர் “மாணவ, மாணவிகள் […]
Continue reading …தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் பயணமாக புதுடில்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். இன்று புதுடில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு பள்ளிகள் மற்றும் அவற்றின் நவீன கட்டமைப்புகளை பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர் “டில்லி அரசு பள்ளிகளை போல் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம். எல்லா துறைகளையும் போல் தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. […]
Continue reading …நடைபாதை, நீரூற்றுகள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் என சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து அந்த செய்தியில், “சென்னை சென்ட்ரல், நகரத்தின் வழியாகச் செல்லும் 6 ரயில் பாதைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. 3 புறநகர், ஒரு எம்.ஆர்.டி.எஸ் மற்றும் இரண்டு மெட்ரோ ரயில் பாதைகள் அமைந்துள்ளன. இப்போது 400 கோடி ரூபாய் மதிப்பிலான சென்ட்ரல் ஸ்கொயர் திட்டத்தின் ஒரு […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாகக் களமிறங்கும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து முடிந்ததும் தோனியும், கம்பீரும் சந்தித்து பேசினர். […]
Continue reading …சமீபத்தில் கேரளாவுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றுள்ளார் நடிகர் அஜித். சமீபகாலங்களாக அஜித் ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் வகையில் பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. இந்நிலையில் விரைவில் அஜித் 61 படத்தின் […]
Continue reading …