Home » Entries posted by Shankar U (Page 57)
Entries posted by Shankar

சூர்யாவுடன் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

Comments Off on சூர்யாவுடன் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா தற்போது “கங்குவா” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. விரைவில் அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் அதற்கான பட்ஜெட் 600 கோடி ரூபாயில் உருவாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த படத்தில் நிக் பவல் என்ற ஸ்டண்ட் இயக்குனர் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் “பிரேவ் […]

Continue reading …

விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல!

Comments Off on விழுப்புரம் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல!

பொதுமக்கள் விழுப்புரம் அருகே உள்ள கிணற்றில் மனித கழிவு கலந்ததாக புகார் கூறியிருந்தனர். அதில் மனித கழிவு கலக்கவில்லை என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். வேங்கை வயலில் கடந்த ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள குடிநீர் கிணற்றில் கலந்ததாக பொதுமக்கள் புகாரளித்தனர். சில மர்ம நபர்கள் மனித கழிவை குடிநீர் கிணற்றில் கலந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த கிணற்றை ஆய்வு […]

Continue reading …

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்!

Comments Off on இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்!

மத்திய அரசு இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. தற்போது முதல் கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 2014ம் ஆண்டுக்கு முன்பு வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு […]

Continue reading …

சுகாதாரத்துறை எச்சரிக்கை!

Comments Off on சுகாதாரத்துறை எச்சரிக்கை!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கான […]

Continue reading …

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Comments Off on வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில […]

Continue reading …

எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

Comments Off on எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

பாஜகவின் எச்.ராஜா பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கடந்த 2018ல் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் […]

Continue reading …

டில்லி ஐடி அலுவலகத்தில் தீ விபத்து!

Comments Off on டில்லி ஐடி அலுவலகத்தில் தீ விபத்து!

டில்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் அங்கிருந்த 7 ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். டில்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் வழக்கம்போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இக்கட்டிடத்தின் 4வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். தீ விபத்து சிக்கிய 7 […]

Continue reading …

வாரிசு சான்றுக்கு பொய்யான தகவல்! உயர் நீதிமன்றம் அதிரடி!

Comments Off on வாரிசு சான்றுக்கு பொய்யான தகவல்! உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வாரிசுரிமை சான்று கோரி பொய் தகவல்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே […]

Continue reading …

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலா பால்!

Comments Off on கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலா பால்!

நடிகை அமலா பால் உள்ளிட்ட 150 கர்ப்பிணிகள் கேரளாவில் நடந்த கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோவில் பங்கேற்றனர். கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்து கொண்டார். 105 கர்ப்பிணிப் பெண்களும் இதில் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரம் […]

Continue reading …

காதலி முன்னே காதலன் ஓட ஓட விரட்டி படுகொலை!

Comments Off on காதலி முன்னே காதலன் ஓட ஓட விரட்டி படுகொலை!

நடுரோட்டில் காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை தாம்பரம் கிழக்கு திருவள்ளுர் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் உதயா என்ற உதயகுமார் (22). இவர் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் சிட்லப்பாக்கம் சேது நாராயணன் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பயங்கர […]

Continue reading …