புதுடெல்லி, செப் 23: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 31,923 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 31,923 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,990 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், 282 பேர் […]
Continue reading …சென்னை, செப் 22: ‘சந்திரமுகி 2’ படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் 2ம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பி.வாசு இயக்கவுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதேபோல், ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்க, நடிகை அனுஷ்காவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், அதற்கு அவர் […]
Continue reading …சென்னை, செப் 22: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல், விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், […]
Continue reading …வாஷிங்டன், செப் 22: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்துப் பேச உள்ளார். இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில், வரும் 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார். இந்த பயணம் குறித்து, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்: அமெரிக்க […]
Continue reading …சென்னை, செப் 22: நடிகரும் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினை நடிகர் வடிவேலு நேற்று சந்தித்துப் பேசினார். திமுக ஆதரவாளராக இருந்த நடிகர் வடிவேலு, அதிமுகவை விமர்சித்ததால் அவருக்குப் பட வாய்ப்புகள் பறிபோனதாகவும், பின் இயக்குநர் ஷங்கருக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால், அவருக்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் அவருக்கான தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, சுராஜ் இயக்கக்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். […]
Continue reading …ஒட்டாவா, செப் 22: கனடாவில், பாராளுமன்ற தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிரதமராக ஜஸ்டின் ட்ருடோ தொடர உள்ளார். கனடாவில், பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில், அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 338 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை. எனினும், அந்த தேர்தலில் லிபரல் கட்சி 155 […]
Continue reading …புதுடெல்லி, செப் 22: நம் நாட்டில், கடந்த ஒரே நாளில், 26,964 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 26,964 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,167 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த ஒரே நாளில், 383 பேர் […]
Continue reading …எலெக்ஷன் கார்னர் அமைச்சர்களிடம் நிதி வசூலித்த மதிமுக! தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மதிமுக தேர்தல் நிதி அளிப்பு கூட்டங்களின் வழியாக இதுவரையில் 21.5 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது. இன்னும் சென்னை மண்டலம் மட்டும் பாக்கி. ‘இது ரொம்பக் குறைவு’ என்று வருத்தம் தெரிவித்திருக்கிறாராம் வைகோ. ‘இதை வசூலிக்க நாங்க பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும்’ என்று புலம்புகிறார்கள் மதிமுகவினர். உதாரணமாக, மதுரை மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்கள் சேர்ந்து 1 கோடி ரூபாய் நிதி கொடுத்தது. அதில், உண்மையில் […]
Continue reading …கிடுகிடு! ஓராண்டை கடந்தும் மிரட்டும் கொரோனா.. 2ம் அலைக்கு வாய்ப்பு அதிகம் சென்னைக்கு கடும் எச்சரிக்கை! சென்னையில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, சென்னையில், 1,857 பேர் சிகிச்சை பெறுகின்றனர். பொதுமக்களின் தொடர் அலட்சியம், மாநகராட்சி சுகாதாரத்துறையின் சுணக்கம் போன்றவற்றால், சென்னையில், கொரோனா இரண்டாம் அலைக்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளதாக, சுகாதார துறை எச்சரித்துள்ளது. சீனாவின், வூஹான் நகரில் பரவ துவங்கிய கொரோனா பாதிப்பு, உலகின் பல்வேறு […]
Continue reading …கூட்டத்தை முடித்துவிட்டு.. விறுவிறுவென கிளம்பி சென்ற ஸ்டாலின்.. திமுக வைத்த குறி இன்று கிளைமேக்ஸ்! சென்னை: நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்திய சந்தோசத்தில் திமுக தலைவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.. இப்படிப்பட்ட நிலையில் இன்றே திமுக மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து முழுமையான கூட்டணியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியில் நேற்று திமுக சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் 2 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். […]
Continue reading …