உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உயநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பளார் விட்ட நீதிபதி!! திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவை சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உதயநிதி அரசியலுக்கு பளார் என உரைக்கும் படி அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை முதல்வராக மாற்றவேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்,பிரச்சாரங்களுக்கு நடுவே ஆதாரமற்ற பல பொய்களையும் கூறிவருவதுடன் ஆபாசமாக பேசுவதையும் […]
Continue reading …சென்னை: அதிமுக கொடியுடன் நேற்று சசிகலா ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி சென்ற செய்தியின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. நேற்று மதியம் 12 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார்.. முன்னதாகவே, ஆஸ்பத்திரிக்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக முழக்கமிட்டு வாழ்த்தி கொண்டிருந்தனர்.. அப்போதுதான் சசிகலா வெளியே வந்து அவருக்காக அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறினார். அதற்கு பின்னால், இன்னொரு காரில் டிடிவி தினகரன் செல்ல, மற்றோரும் பின்னாடியே காரில் கிளம்பி சென்றனர். ஜெயலலிதா சசிகலா ஏறிச்சென்ற கார் […]
Continue reading …தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். ஆன்லைன் வகுப்புகளில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள உதவிடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை […]
Continue reading …மத்திய ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அகவிலைப்படியை (டிஏ மற்றும் டிஆர்) ஆகியவற்றை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மத்திய அரசு தடை செய்தது. கொரோனா மற்றும் லாக்டவுன் காரணமாக இந்த கட்டுப்பாடு எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க மோடி அரசு தயாராகி வருகிறது. தற்போது, மத்திய அரசு ஊழியர்களின் டிஏ 17 சதவீதமாக உள்ளது. அரசாங்கம் டி.ஏ.வை அதிகரித்தால், இந்த […]
Continue reading …மும்பை: மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மீண்டும் சர்ச்சைக்குள்ளானார் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா. மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி பேசுப்பொருளாக மாறியுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, ‘உடலுறவு கொள்வதை தவிர தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே பாலியல் அத்துமீறலாகும்’ என சமீபத்தில் தீர்ப்பளித்தார். அதுமட்டுமல்லாமல் […]
Continue reading …மதுரை: சோறு முக்கியமா,.. சங்கம் முக்கியமா என்று கேள்வி கேட்ட குஷ்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் முக ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலை மதுரை பொதுக்கூட்டத்தில் குஷ்பு பேசும் போது ராகுல்காந்தியை தலைவரே இல்லை என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு நேற்று அக்கட்சியின் தேசிய தலைவர ஜேபி நட்டா கலந்து கொண்ட மதுரை நிகழ்ச்சியில் பேசுகையில், மக்கள் […]
Continue reading …சென்னை: கதை திருட்டு வழக்கு தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி ஷங்கர் எந்திரன் திரைப்படம் எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆரூர் தமிழ்நாடான் குற்றச்சாட்டு எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம் ஆண்டு இனிய உதயம் […]
Continue reading …புது தில்லி: மத்திய அரசு புதிதாக நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் இலக்கு என்பது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது மட்டுமல்ல, உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாகும். நமது கிராமப்புறங்களை […]
Continue reading …சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 19ம் தேதி சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 27ஆம் தேதி சசிகலா தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், ஆறு […]
Continue reading …சசிகலா வரும் போது அரசியலில் ஒரு சில அதிர்வுகள் ஏற்படும் என இயக்குனர் கௌதமன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பேரரசு கட்சியின் தலைவரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன், தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வழியில் சசிகலா பயணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்ட நாளில்,அவசர அவசரமாக ஜெயலலிதா நினைவிடம் திறந்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார். தமிழக அரசு ஆறுபடை வீடுகள் இருக்கும் […]
Continue reading …