Home » Entries posted by Shankar U (Page 61)
Entries posted by Shankar

பெங்களூருவில் பலத்த கனமழை!

Comments Off on பெங்களூருவில் பலத்த கனமழை!

நேற்றிரவு பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக தரையிறங்க முடியாத 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. நேற்றிரவு பெங்களூருவில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 10 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இன்று அதிகாலை பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும், 10 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. முன்னதாக பெங்களூரு நகரம் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் […]

Continue reading …

10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்!

Comments Off on 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்!

சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது, அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யும் தேதியும் அறிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இன்று காலை தேர்வு முடிவுகள் 9 மணிக்கு தேர்வு துறை இயக்குனர் […]

Continue reading …

விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி!

Comments Off on விளம்பரத்தில் நடிக்க மறுத்த சாய்பல்லவி!

சாய்பல்லவியை விளம்பரத்தில் நடிக்க அழகுபொருள் நிறுவனம் ஒன்று கேட்டதற்கு மறுத்துவிட்டாராம். நடிகை சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் பிஸியாக வலம் வருகிறார். “பிரேமம்“ படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி சிறந்த டான்ஸரும் கூட. தொடர்ந்து இவர் நடித்த “மாரி 2,” “ஷ்யாம் சிங்கா ராய்” என பல திரைப்படங்களும் ஹிட்டானது. பிரபலமான நடிகர், நடிகைகளை பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரம் செய்வதற்கான விளம்பர படத்தில் நடிக்க வைப்பது வழக்கம். […]

Continue reading …

திறந்த வெளி சிறை அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு!

Comments Off on திறந்த வெளி சிறை அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு!

சுப்ரீம் கோர்ட்டில் சிறைகளில் இட நெருக்கடி அதிகரித்து வருவதை அடுத்து திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கலாம் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சிறைகளில் இடநெருக்கடிகளை குறைக்க திறந்தவெளி சிறைகள் மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் இட நெருக்கத்தின் தீர்வு காண்பது மட்டுமின்றி கைதிகள் மறுவாழ்வுக்கும் தீர்வாக இருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திறந்தவெளி சிறை மூலம் சமுதாயத்துடன் கைதிகளை ஒருங்கிணைக்க செய்ய முடியும் என்றும் சிறைக்கு […]

Continue reading …

கிண்டலுக்கு உள்ளான முருகன் சிலை!

Comments Off on கிண்டலுக்கு உள்ளான முருகன் சிலை!

சேலம் மாவட்டம் ஓமலூரில் நிர்மாணிக்கப்பட்ட 56 அடி உயர முருகன் சிலை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மலேசியாவில் இருக்கும் முருகன் கோவில் போல் தமிழகத்தில் பல பகுதிகளில் சிலை அமைத்து வழிபாடு நடந்து வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் முருகருக்கு 56 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் என்றால் அழகு என்பார்கள். அதற்கேற்றார்போல வீட்டு காலண்டர் தொடங்கி கோவில் வரை சிரித்த இதழோடு அழகிய முருகனை கண்டிருப்போம். ஆனால் அந்த […]

Continue reading …

நடிகர் சிங்கம்புலி மருத்துவமனையில் அனுமதியா?

Comments Off on நடிகர் சிங்கம்புலி மருத்துவமனையில் அனுமதியா?

சமூகவலைதளங்களில் நடிகர் சிங்கம்புலி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது சிகிச்சைக்கு பணம் கேட்டுள்ளதாகவும் பதிவிடப்பட்டிருந்தது. இயக்குனர் மற்றும் நடிகருமான சிங்கம் புலி திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இருப்பதாகவும், அவருக்கு பணம் கொடுத்த உதவ வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சிங்கம்புலி, “எனது வீடியோ ஒன்றை வெளியிட்டு […]

Continue reading …

காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!

Comments Off on காங்கிரஸ் வேட்பாளரின் பேச்சால் பரபரப்பு!

காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு மனைவி இருந்தால் இரண்டு லட்சம் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதில் மகாலட்சுமி திட்டம் என்று அறிவிப்பு பலரையும் கவர்ந்தது என்பதும் இந்த திட்டத்தின்படி ஏழை குடும்ப பெண்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் அவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் […]

Continue reading …

சொத்துக்காக நடிகை கொலை; வளர்ப்பு தந்தை கைது!

Comments Off on சொத்துக்காக நடிகை கொலை; வளர்ப்பு தந்தை கைது!

பாலிவுட் நடிகையை வளர்ப்புத் தந்தையே சொத்துக்காக கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பாலிவுட் நடிகை லைலா கான் திடீரென காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். லைலா கானின் தாயார் பர்வேஸை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர்தான் லைலா காணாமல் போனதற்கு காரணம் என்றும் கண்டுபிடித்தனர். இதை அடுத்து பர்வேஸிடம் போலீசார் விசாரித்த […]

Continue reading …

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்!

Comments Off on கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றம் வரும் ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையிலடைக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்டு இடைக்கால ஜாமின் […]

Continue reading …

5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன் பிடித்திருவிழா!

Comments Off on 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன் பிடித்திருவிழா!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கண்மாயில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில், தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன. அவற்றை குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் குறவை, […]

Continue reading …