Home » Entries posted by Shankar U (Page 65)
Entries posted by Shankar

தமிழகத்தில் மே 6 வரை வெப்ப அலை வீசும்!

Comments Off on தமிழகத்தில் மே 6 வரை வெப்ப அலை வீசும்!

மே 6ம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) நிலக்கோட்டை (திண்டுக்கல்) 5. […]

Continue reading …

வளர்ப்பு தாயை கொலை செய்த மகன்!

Comments Off on வளர்ப்பு தாயை கொலை செய்த மகன்!

வளர்ப்பு தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்துள்ளார் அவரது மகன். ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிபாய், தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக்கை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். தத்து நாயக், சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அடிக்கடி லட்சுமிபாயுக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவிக்கவே, […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து தேர்தல் பிரச்சாரம்?

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து தேர்தல் பிரச்சாரம்?

மதுபான வழக்கில் சிக்கி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் சிறையில் இருந்தவாறு காணொளி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட தற்போது திகார் சிறையில் உள்ளார். வழக்கறிஞர் அமர்ஜித் குப்தா என்பவர் சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொளி வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்க […]

Continue reading …

தென்னக ரயில்வேயின் அறிவிப்பால் அதிர்ச்சி!

Comments Off on தென்னக ரயில்வேயின் அறிவிப்பால் அதிர்ச்சி!

திருவண்ணாமலைக்கு இன்று முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் இயக்கப்பட இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ரயில் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்பட்டு வரும் ரயிலை திருவண்ணாமலை வரை நீடிக்க வேண்டும் என்று நீண்டநாளாக பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று முதல் சென்னை கடற்கரை முதல் திருவண்ணாமலை வரை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மே 2ம் தேதி […]

Continue reading …

வறட்சியால் கால்நடைகள் உயிரிழப்பு!

Comments Off on வறட்சியால் கால்நடைகள் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மசினகுடி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 பசுமாடுகள் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக […]

Continue reading …

“மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம்!

Comments Off on “மாற்றம்” சமூக நலப்பணிகள் துவக்கம்!

நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமாகி வருகிறார். தனிப்பட்ட முறையில் இதுவரையில் பல மக்களுக்கு உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை தரும் மாற்றம் செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து செயல்படவுள்ளார். இவர்களுடன் கலக்கப்போவது பாலா, செஃப் வினோத், அறந்தாங்கி நிஷா ஆகியோர் உட்பட இணைந்துள்ளனர். இந்த அறக்கட்டளை மூலம், தமிழக […]

Continue reading …

உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!

Comments Off on உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பதில்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாச ஸ்தலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்பபெறக்கூடிய திட்டம் அதாவது, அதன் விலை மீது மேலும் 10 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்துவிட்டு, பாட்டில்களை திரும்பத்தரக்கூடிய வாடிக்கையாளருக்கு 10 ரூபாயை திருப்பி அளிக்கக்கூடிய திட்டமானது அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் […]

Continue reading …

மூடநம்பிக்கையால் இளைஞர் பலி!

Comments Off on மூடநம்பிக்கையால் இளைஞர் பலி!

கங்கை நதியில் பாம்பு கடிபட்ட இளைஞரை மூடநம்பிக்கையால் மிதக்கவிட்டதால் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விதமான நோய்களுக்கும் இன்றைய காலக்கட்டத்தில் நவீன மருத்துவமுறைகள் இருந்தாலும், சில மூடநம்பிக்கைகள் காரணமாக மோசமான விளைவுகளை தேடிக் கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் புலன்சாகர் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியைச் சேர்ந்த வருமாவரித்துறை ஊழியரான விஜய் சிங்கின் இளைய மகன் மோஹித் அனுப்சாகர் கல்லூரியில் […]

Continue reading …

டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் நீக்கம்!

Comments Off on டில்லி மகளிர் ஆணையத்தில் 223 ஊழியர்கள் நீக்கம்!

டில்லி மாநில ஆளுநர் வி.கே.சக்சேனா மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி அவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். ஆளுநர் அலுவலகத்திலிருந்து டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஸ்வாதி மாலிவால், விதிகளுக்கு மாறாக நிறைய ஊழியர்களை நியமனம் செய்ததாகவும், ஒப்பந்த அடிப்படையில், சரியான அணுகுமுறை இல்லாமல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நியமனங்கள் விதிகளுக்கு மீறியிருப்பதால் டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா […]

Continue reading …

கைவிடப்பட்ட நடன உலக சாதனை முயற்சி!

Comments Off on கைவிடப்பட்ட நடன உலக சாதனை முயற்சி!

நடிகர் பிரபு தேவா நடனத்தில் சிறந்ததோடு மட்டுமல்லாமல் அவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார். பிரபு தேவா நடன இயக்குனராக பணிபுரிந்த பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிக்கு மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடங்கள் தொடர்ந்து நடனம் ஆடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு பிரபுதேவா வரவிருப்பதாக கூறியிருந்த நிலையில் வருகை தராமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ மாணவிகளை நீண்ட நேரம் நிற்க வைத்ததால் பெற்றோர்கள் […]

Continue reading …