
சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி […]
Continue reading …
பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி, சின்ன பேராலி, பாண்டியன்நகர், ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில், “நாடுமுழுவதும் பாஜக தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். வெற்றிபெறும் கட்சியின் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுத்தால் எல்லா மக்கள் நலத்திட்டங்களும் எளிமையாக மக்களை வந்தடையும் வளம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இடைத்தரகரே இல்லாமல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]
Continue reading …
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் “இது சிபிஐ கஸ்டடி அல்ல பாஜக கஸ்டடி” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். கவிதா கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அவர் டில்லி திகார் திரையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மீண்டும் அவர் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடைய காவல் ஏப்ரல் […]
Continue reading …
ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளம் நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 2.13 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சட்ட விரோத செய்திகள் பரப்புதல், பாலியல் காணொளிகளை பரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரத்திற்கும் மேலான இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசிடம் எக்ஸ் தளம் குற்றம் […]
Continue reading …
தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி பிரச்சாரத்திற்கு ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
Continue reading …
ஏப்ரல் 23ம் தேதி வரை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் […]
Continue reading …
“சிறகன்” என்ற தலைப்பில் மேட் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் துர்கா பேட்ரிக் தயாரித்துள்ளது. கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக், பௌசி ஹிதாயா, வினோத் ஜிடி, ஹர்ஷிதா ராம், பாலாஜி, மாலிக், பூவேந்தன், ரயில் ரவி, சானு ஆகியோர் முக்கிய கதாபாத்திரகளில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார். வெங்கடேஷ்வராஜ். இவர் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் விதி. டெக் மாஸ்டர் இன் பிலிம் அண்ட் எலக்ட்ரானிக் மீடியா ஸ்டடிஸ் துறையில் பட்டம் […]
Continue reading …
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஆவாரம்பாளையம் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரவு 10.30 மணிக்கு பின் வந்துள்ளார். இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில், 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதையடுத்து […]
Continue reading …