Home » Entries posted by Shankar U (Page 79)
Entries posted by Shankar

ஆச்சர்ய தகவலைப் பகிர்ந்த பஹத் பாசில்!

Comments Off on ஆச்சர்ய தகவலைப் பகிர்ந்த பஹத் பாசில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் “வேட்டையன்” திரைப்படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் […]

Continue reading …

10 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி!

Comments Off on 10 ஆயிரம் பேருக்கு இலவச பிரியாணி!

கோவையில் இன்று ரம்ஜான் கொண்டாட்டமாக பல இடங்களில் மக்களுக்கு விநியோகிக்க இஸ்லாமிய மக்கள் பிரியாணி தயார் செய்து வருகின்றனர். அன்பையும், சகோதரத்துவத்தையும் போற்றும் இஸ்லாமிய பண்டிகையாக ரம்ஜான் பெருநாள். தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட சில அமைப்புகள் நேற்று பெருநாள் கொண்டாடி இருந்தாலும், தலைமை காஜி அறிவிப்பின்படி பெரும்பான்மை மக்கள் இன்று பெருநாளை கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் சிறப்பு கூட்டுத் தொழுகை பிரார்த்தனை மேற்கொண்டனர். கோவையில் போத்தனூர், உக்கடம், கோட்டைமேடு என பல பகுதிகளில் […]

Continue reading …

ரூ.54,000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை!

Comments Off on ரூ.54,000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று மீண்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ…. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6725 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 […]

Continue reading …

நாளை 5-ம் கட்ட பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி!

Comments Off on நாளை 5-ம் கட்ட பிரச்சாரம்; அமைச்சர் உதயநிதி!

வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர். 5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 23-ம் தேதி […]

Continue reading …

தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா!

Comments Off on தேர்தல் பிரச்சாரத்தில் ராதிகா!

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிடுகிறார். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிலர் ’கிழக்கு சீமையிலே’ கேரக்டர் போல் நடித்துக் காமிங்கள் என்று கேட்டுக் கொல்ல உடனே அவர் நடித்து காண்பித்தது வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக் தாகூர், தேமுதிக வேட்பாளராக விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். மூவருக்கும் இடையே போட்டி சரிசமமாக இருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் […]

Continue reading …

விஜய் படத்திலிருந்து விலகிய தெலுங்கு தயாரிப்பாளர்!

Comments Off on விஜய் படத்திலிருந்து விலகிய தெலுங்கு தயாரிப்பாளர்!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது “தி கோட்” படத்தில் நடித்து வருகிறார். அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்துக்குப் பின் இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் […]

Continue reading …

சாப்பிட்டு பணம் கொடுக்காததால் விவசாயியை கொன்ற டிபன் கடைக்காரர்!

Comments Off on சாப்பிட்டு பணம் கொடுக்காததால் விவசாயியை கொன்ற டிபன் கடைக்காரர்!

டிபன் கடையில் சாப்பிட்டுவிட்டு ரூ.20ஐ கொடுக்காமல் சென்ற விவசாயியை அக்கடைக்காரர் அடித்துக் கொன்ற சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கொன்னக்குடி கிராமத்தை சேர்ந்த 58 வயதான ஏசுதாஸ் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில் ஏசுதாஸ் அதே பகுதியில் ஜோசப்ராஜ் நடத்தி வந்த ஓட்டலில் டிபன் சாப்பிட்டுள்ளார். அதில் ரூ.20 தர வேண்டியது இருந்த நிலையில் கடனாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதை அவர் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. கடந்த 8ம் தேதி […]

Continue reading …

திருச்சியில் தேறுவாரா துரை வைகோ?

Comments Off on திருச்சியில் தேறுவாரா துரை வைகோ?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக செலவு செய்ய முடியாமல் அவர் தடுமாறுவதாக கூறப்படுகிறது. முதல் முறையாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோ களம் இறங்கி உள்ளார். கூட்டணி கட்சிகள் ஆதரவு அவருக்கு இருந்தாலும் பணம் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சியில் துரை வைகோவுக்கு எதிராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் பாஜக கூட்டணியின் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகிய இருவரும் […]

Continue reading …

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் அப்டேட்!

Comments Off on பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் அப்டேட்!

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க உள்ள அடுத்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கிறார்கள். ‘ஓ மை கடவுளே’ புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கவிருக்கிறார். வரும் மே மாதம் தொடங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இது ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் 26வது படைப்பாகும். புதிய படத்தை அறிவிப்பதற்காக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்துவின் நிஜ […]

Continue reading …

குழந்தைகளை காப்பாற்ற பாம்பிடம் சண்டையிட்டு இறந்த நாய்!

Comments Off on குழந்தைகளை காப்பாற்ற பாம்பிடம் சண்டையிட்டு இறந்த நாய்!

வீட்டிற்குள் நுழைந்த பாம்பிடம் சண்டையிட்டு குழந்தைகளை காப்பாற்றி நாய் இறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்திலும் நன்றியிலும் முதலிடத்தில் இருப்பது நாய்கள்தான். அந்த பாசத்திற்காக நாய் உயிரையே விட்ட சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. அரியலூரில் உள்ள கழுவன்தொண்டி கிராமத்தை சேர்ந்த செல்வேந்திரன். இவரும், இவரது மனைவி சாந்தியும், 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் சகிதம் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டில் கடந்த 11 ஆண்டுகளாக ஹெண்ட்ரி என்று ஒரு நாயையும் வளர்த்து வந்துள்ளனர். குடும்பத்தினரிடம் மிகவும் […]

Continue reading …