
காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பார்வை இல்லாத ஒருவன் கண்ணாயிரம் என்று பெயர் வைத்துக் கொள்வது போல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் பரதேசி சீமான் என்ற பெயர் வைத்துக் கொள்வான் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி போட்டியில் இருக்கிறது. சீமான் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. இதை ஒரு நான்காவது கூட்டணியாக அரசியல் விமர்சகர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் […]
Continue reading …
“என்னை அறிந்தால்” திரைப்படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. இப்போது அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்கும் “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. அவர் “மான் கராத்தே” மற்றும் “கெத்து” ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் […]
Continue reading …
அஸர்பைஜானில் அஜீத் நடித்து வரும் “விடாமுயற்சி” படத்தின் ஷுட்டிங் தற்போது நடந்து வருகிறது. அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஜீத் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அவரால் இன்னும் சில மாதங்களுக்கு ஷூட்டிங் செல்ல முடியாது என ஒரு வதந்தி பரவி வந்தது. இது […]
Continue reading …
தென்னக ரயில்வே சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இடையே இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் தேர்வு முடிவடையும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையிலிருந்து நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வேயின் செய்தி குறிப்பில், சென்னை, எழும்பூரில் இருந்து வரும் ஏப்.5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27, 28 தேதிகளில் காலை […]
Continue reading …
பள்ளி கல்வித்துறை ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு சில தேர்வுகள் தேதி மாற்றம் செய்தது. கோடை விடுமுறை எப்போது என்பது குறித்த தகவலையும் அறிவித்துள்ளது. பள்ளிகல்வித்துறை ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13 முதல் நடத்தப்படும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி […]
Continue reading …
இந்தியில் கடந்த சில வருடங்களாக மறைந்த மற்றும் உயிரோடு இருக்கும் அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமாக் கலைஞர்களின் பயோபிக் திரைப்படங்கள் அதிகமாக வெளிவந்திருக்கின்றன. அவ்வகையில் விரைவில் சாவர்க்கர் மற்றும் இந்திரா காந்தி ஆகியோரின் பயோபிக் ரிலீஸாகவுள்ளது. தற்போது தமிழில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப்படம் உருவாக உள்ளது. அதில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பயோபிக் திரைப்படம் உருவாகுமா என்ற கேள்விக்கு அவரின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர் அளித்த பதிலில், […]
Continue reading …
“ராயன்” திரைப்படம் தனுஷ் நடிப்பில் அவரே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார். இப்படத்தில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் […]
Continue reading …
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகியக் கால கடனுக்கான எந்த மாற்றமும் இல்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 6.5% வட்டி விகிதம் என்படு தொடரும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை ரெப்போ வங்கி வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் “ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வங்கி வட்டி விகிதம் […]
Continue reading …
தமிழகத்தில் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் கடுமையாகும் என தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு காற்றின் திசை மாறுபாடு காரணமாக வரும் 8ம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும். அதிகபட்சமாக வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், உள் மாவட்டங்களில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வரையிலும், கடலோரப்பகுதிகளில் 98.6 டிகிரி […]
Continue reading …
விவசாயிகளின் வாழ்வியலை மையப்படத்தி உருவாகியுள்ள படம் “பரமன்”. இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் யி சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ளது. இப்படத்தில் ‘ஜெய்பீம்‘, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, […]
Continue reading …