Home » Entries posted by Shankar U (Page 86)
Entries posted by Shankar

அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு!

Comments Off on அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேச்சு!

அச்சுந்தன்வயல் ஊராட்சி மன்ற தலைவி சசிகலா லிங்கம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர்கள் இராமநாதபுரம், அச்சுந்தன்வயல், உத்திரகோசமங்கை பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நவாஸ் கனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நவாஸ்கனியை ஆதரித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது. […]

Continue reading …

ரீ ரிலீஸாகும் ‘பையா’!

Comments Off on ரீ ரிலீஸாகும் ‘பையா’!

தற்போது 14 வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த பல வெற்றி படங்கள் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக ரீ ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கையும் அதற்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் இயக்குநர் என்.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பையா’ திரைப்படம் புதிய டெக்னாலஜி அடிப்படையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு, வரும் ஏப்ரல்-11ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. லிங்குசாமியின் […]

Continue reading …

வடசென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை?

Comments Off on வடசென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை?

வருமானவரித்துறையினருக்கு வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் பரிசு பொருள்கள் தரப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானதால் அத்தொகுதியில் அதிரடியாக சோதனை செய்தனர். வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் பணப்பட்டுவாடா நடப்பதாக கூறப்படுகிறது. வடசென்னை தொகுதியில் பணப்பட்டுவாடா மற்றும் பரிசு பொருள்கள் வழங்க இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை முதல் […]

Continue reading …

போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு; உதயநிதி பேச்சு!

Comments Off on போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு; உதயநிதி பேச்சு!

இந்தியத் தேர்தல் ஆணையம் 18வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “வடசென்னைக்கு 3 வது முறையாக வருகிறேன். தேர்தலுக்காக வருபவர்கள் […]

Continue reading …

டிஆர் பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா?

Comments Off on டிஆர் பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா?

பாஜகவில் டிஆர் பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் டி.ஆர்.பாலு. இவர் திமுகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டு வருகிறார். டி.ஆர்.பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா ஏற்கனவே அமைச்சராகவுள்ளார். டி.ஆர்.பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை பாஜகவுக்கு இழுக்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலுவுக்கும் மனோன்மணிக்கும் […]

Continue reading …

ரூ.5900 கோடியை என்ன செய்தார்கள்? நிர்மலா சீதாராமன்

Comments Off on ரூ.5900 கோடியை என்ன செய்தார்கள்? நிர்மலா சீதாராமன்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.5900 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. அதை என்ன செய்தார்கள்? என்று தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்” என்று பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவரது பேட்டியில், “மத்திய அரசு சென்னைக்கு 5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளது. […]

Continue reading …

பாடம் கற்றுக்கொண்ட விஜய் தேவரகொண்டா!

Comments Off on பாடம் கற்றுக்கொண்ட விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டாராக உருவாகி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேன் இந்தியா படமான “லைகரி”ல் நடித்தார். ஆனால் அத்திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது. “லைகர்” படத்துக்குப் பின் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக “குஷி” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது விஜய் தேவரகொண்டா பரசுராம் இயக்கத்தில் ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிருனாள் […]

Continue reading …

ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டியிடும் தொகுதி?

Comments Off on ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டியிடும் தொகுதி?

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஆந்திர மாநிலத்தில் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக 18வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் […]

Continue reading …

வனிதா விஜயகுமார் மகன் ஹீரோவாகிறார்!

Comments Off on வனிதா விஜயகுமார் மகன் ஹீரோவாகிறார்!

விரைவில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா திரைவுலகில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வனிதா விஜயகுமார் மற்றும் அவரது முன்னாள் கணவர் ஆகாஷ் ஆகியோருக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீஹரி. 22 வயதான இவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக போகிறார். இவரது முதல் படத்தை பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு இளம் காதலர்களின் கதையம்சம் […]

Continue reading …

சஞ்சய் சிங்குக்கு ஜாமின்!

Comments Off on சஞ்சய் சிங்குக்கு ஜாமின்!

ஆம் ஆத்மி எம்பி., சஞ்சய் சிங் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டில்லி துணைமுதலமைச்சர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் […]

Continue reading …