Home » Entries posted by Shankar U (Page 87)
Entries posted by Shankar

எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!

Comments Off on எம்.எல்.ஏ. உள்ளிட்ட 300 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!

அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்பட 300 பேர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனுமதி இன்றி கூட்டம், பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு […]

Continue reading …

இயக்குனர் அமீரிடம் 5 மணி நேரம் விசாரணை!

Comments Off on இயக்குனர் அமீரிடம் 5 மணி நேரம் விசாரணை!

திரைப்பட இயக்குனர் அமீர் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு இன்று ஆஜரானார். ஜாபர் சாதிக் ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார். ஜாபர் சாதிக்கின் நண்பரான இயக்குனர் அமீர் இன்று ஆரஜாக சம்மன் அனுப்பப்பட்டது. டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தன் வழக்கறிஞர் பிரபாகரனுடன் ஆஜரானார். அப்போது, ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு பற்றி அமீரிரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. போதை […]

Continue reading …

பாமகவை விமர்சித்த ஜெயக்குமார்!

Comments Off on பாமகவை விமர்சித்த ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராமதாசுக்கு சீட் பேரம் தான் முக்கியம் என்று விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா இல்லை என்றால் பாமக வெளியே தெரிந்திருக்காது. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் பாமகவினர், பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்க தான் விரும்பினார்கள். பேரம் அதிகமாகும் இடத்தில் தான் ராமதாஸ் உடன்படுவாறே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது, எதுவுமே அவருக்கு கிடையாது. பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது அதிமுக தான். […]

Continue reading …

சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல்!

Comments Off on சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல்!

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருபவர். இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் மனைவி. சரண்யா பொன்வண்ணனுக்கும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் கார் நிறுத்துவது தொடர்பாக சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையின் போது சரண்யா பொன்வண்ணன் பக்கத்து வீட்டுக்காரரை கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து ஸ்ரீதேவி என்ற பெண் சிசிடிவி […]

Continue reading …

மூன்றே நாளில் வசூலை அள்ளி குவித்த “ஆடுஜீவிதம்!”

Comments Off on மூன்றே நாளில் வசூலை அள்ளி குவித்த “ஆடுஜீவிதம்!”

மலையாள இலக்கியத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த படைப்பு பென் யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவல். இந்நாவல் தமிழுலும் மொழி பெயர்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். 8 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி ரிலீசானது. கேரளாவில் இருந்து அரபு நாட்டுக்கு வேலைக்கு செல்லும் ஒரு இளைஞன் அங்கு ஆடு மேய்ப்பவராக பாலைவனத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர் வாழ்க்கை […]

Continue reading …

பார்த்திபனின் டீன்ஸ் பட டீசர் எப்படி?

Comments Off on பார்த்திபனின் டீன்ஸ் பட டீசர் எப்படி?

“இரவின் நிழல்” என்ற திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது. தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்ட பார்த்திபன் படத்தில் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளளார். பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த […]

Continue reading …

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!

Comments Off on சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!

ஏ.ஆர்.முருகதாஸ், “தர்பார்” தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்தார். அவர் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார். கடந்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என […]

Continue reading …

தசரா இயக்குனரோடு மீண்டும் கூட்டணி சேரும் நானி!

Comments Off on தசரா இயக்குனரோடு மீண்டும் கூட்டணி சேரும் நானி!

நடிகர் நானி தென்னிந்திய நடிகர்களில் சிறந்த கதைக்களன்களை தேர்வு செய்து நடித்து கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ரிலீசான நானி நடித்த “தசரா” திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30ம் […]

Continue reading …

இனி சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு ரயில் வராதா?

Comments Off on இனி சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு ரயில் வராதா?

அவ்வப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் சிக்னல் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இது குறித்த பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், கடற்கரை ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஆலப்புழையில் இருந்து வரும் அதிவிரைவு ரயில் ஏப்.2-ம் தேதி திருவள்ளூருடன் நிறுத்தப்படும். பெங்களூரில் இருந்து வரும் மெயில் […]

Continue reading …

கச்சத்தீவு விவகாரம் குறித்து ப சிதம்பரம்!

Comments Off on கச்சத்தீவு விவகாரம் குறித்து ப சிதம்பரம்!

சமீபத்தில் கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை மீண்டும் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கச்சத்தீவு விவகாரம் குறித்தும் இந்திய நிலங்களை சீனா ஆக்கிரமித்தது குறித்தும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “1974ம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி.மீ. அதனைத் தந்து […]

Continue reading …