Home » Entries posted by Shankar U (Page 96)
Entries posted by Shankar

தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

Comments Off on தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதிமுக சார்பில் 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் அறிவித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் […]

Continue reading …

பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை!

Comments Off on பாஜகவில் மீண்டும் இணைந்த தமிழிசை!

தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். மீண்டும் அவர் பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார். மீண்டும் பாஜகவில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தது அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் விவாத பொருளாக மாறியது. நேரடியாக மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததாக தமிழிசை விளக்கமளித்தார். சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான […]

Continue reading …

திமுக வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

Comments Off on திமுக வாக்குறுதிகள் குறித்து அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள், இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே […]

Continue reading …

மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

Comments Off on மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில அறிவுரைகளை கூறினார். அதில் “எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர் பதில் சொல்லியாக வேண்டும், எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும், எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் […]

Continue reading …

கஞ்சா விற்றதை போலீசுக்கு சொன்னவர் கொலை!

Comments Off on கஞ்சா விற்றதை போலீசுக்கு சொன்னவர் கொலை!

இளைஞர் ஒருவர் கஞ்சா விற்றதை போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த விக்னேஷ் லாரி ஓட்டுனராக இருந்தார். அவரது நண்பர் சசிகுமார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. சசிகுமார் கஞ்சா விற்றது தொடர்பாக விக்னேஷ் ரகசியமாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை சசிகுமார் அறிந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து விக்னேஷை தனியாக அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது கொடுத்து போதை தலைக்கேறியவுடன் அறிவாள் […]

Continue reading …

அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின்!

Comments Off on அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமின்!

இன்று உச்சநீதிமன்றம் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு துணை இயக்குநர் அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி திண்டுக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கீத் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் வழங்க […]

Continue reading …

தமிழிசைக்கு டெபாசிட் கிடைக்காது; அமைச்சர் ரகுபதி!

Comments Off on தமிழிசைக்கு டெபாசிட் கிடைக்காது; அமைச்சர் ரகுபதி!

தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர், “தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டில் எந்த தொகுதிகள் என்றாலும் அவர் டெபாசிட்டுக்கு போராட வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் கூட பிகாரில் சென்று போட்டியிடுவார் என்று செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது, அப்படி நடந்தால் […]

Continue reading …

மத்திய அமைச்சர் சோபா மீது வழக்குப்பதிவு!

Comments Off on மத்திய அமைச்சர் சோபா மீது வழக்குப்பதிவு!

மத்திய அமைச்சர் சோபா மீது தமிழர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் மதுரை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரது இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து தனது பேச்சுக்கு […]

Continue reading …

திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்த தமிமுன் அன்சாரி!

Comments Off on திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்த தமிமுன் அன்சாரி!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியவுடன் அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்தவர். அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தான் வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பார் என்று கூறப்பட்டது. திடீரென மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரே கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவும் […]

Continue reading …

தி.மு.க. விமர்சனம் செய்த பிரதமர் மோடி!

Comments Off on தி.மு.க. விமர்சனம் செய்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி “வரும் மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்ல வேண்டும்” என்று பேசினார். ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் வரும் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் […]

Continue reading …