Home » Entries posted by Shankar U (Page 97)
Entries posted by Shankar

பாஜக தோல்வியை தழுவும்; மல்லிகார்ஜூன காக்கே!

Comments Off on பாஜக தோல்வியை தழுவும்; மல்லிகார்ஜூன காக்கே!

ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் வரும் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் […]

Continue reading …

மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத சாதனை!

Comments Off on மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத சாதனை!

சமீபத்தில் வெளியான “மஞ்சும்மாள் பாய்ஸ்” திரைப்படம் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் கூட செய்யாத அளவுக்கு 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான “மஞ்சும்மாள் பாய்ஸ்” படம் வசூல் சாதனை செய்துள்ளது மலையாள திரை உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் “மஞ்சும்மாள் பாய்ஸ்” திரைப்படம் மலையாளத்தில் எவ்விதமான எதிர்பார்ப்புமின்றி வெளியானது. இத்திரைப்படம் கேரளாவில் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி இத்திரைப்படத்தில் கமல்ஹாசனின் […]

Continue reading …

மோடியை புகழ்ந்து தள்ளிய கூட்டணி தலைவர்கள்!

Comments Off on மோடியை புகழ்ந்து தள்ளிய கூட்டணி தலைவர்கள்!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக போவது உறுதி என்று தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளுக்காக, சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை கூட்டணி கட்சித் தலைவர்கள் கைகுலுக்கி வரவேற்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மாற்றம் வேண்டும் என நினைத்து பாஜக கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளோம். […]

Continue reading …

வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக அலுவலகம்!

Comments Off on வெறிச்சோடி காணப்பட்ட தேமுதிக அலுவலகம்!

சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்பதால் தேமுதிக அலுவலகமே காலியாக உள்ளது. தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுக்க முடியாமல் உள்ளது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வரும் வியாழக்கிழமை எந்த கூட்டணியில் இணைவது குறித்து அறிவிப்பை […]

Continue reading …

ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!

Comments Off on ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்கள்!

ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் சென்னையில் உள்ள 4 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீசார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேசமயம் காவல் நிலையங்களை உலகத் தரத்தில் தரம் உயர்த்தும் பணியும் நடைபெறுகிறது. புகாரளிக்க வரும் மனுதாரர்களை இன்முகத்தோடு வரவேற்றல், காவல் நிலைய கட்டுமான அமைப்புகள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படுதல், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தனியாக வாகன நிறுத்துமிட வசதி […]

Continue reading …

ஓபிஎஸ் பேச்சை நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி!

Comments Off on ஓபிஎஸ் பேச்சை நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி!

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்றுவரும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாஜக நிர்வாகி அவரை பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பாரத் மாதா கி ஜே என முழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் டிடிவி தினகரன், வாசன், ஓ பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர் செல்வம் இந்த […]

Continue reading …

சின்னம் கிடைத்ததால் பாமகவினர் மகிழ்ச்சி!

Comments Off on சின்னம் கிடைத்ததால் பாமகவினர் மகிழ்ச்சி!

பாமக மாம்பழம் சின்னத்தை கேட்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தது. அக்கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் போட்டியிடும் சின்னத்தை விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகிறது. பாமக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தரத்தை இழந்தது. மீண்டும் மாம்பழம் சின்னத்தை விண்ணப்பித்திருந்த நிலையில் அது குறித்த பரிசீலனை கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த […]

Continue reading …

பிரேமலதா முக்கிய அப்டேட்!

Comments Off on பிரேமலதா முக்கிய அப்டேட்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிகளை பாஜக, அதிமுக கொடுக்க முன் வராததால் இன்னும் கூட்டணி இழுபறி தொடர்கிறது. இதற்கிடையே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் […]

Continue reading …

மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் திமுக; பிரதமர் மோடி

Comments Off on மத்திய அரசின் நிதியை வீணடிக்கும் திமுக; பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிப்பதாகவும், இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, “பாமகவின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது. இந்து தவிர வேறு மதங்களை இந்தியா கூட்டணியினர் அவமதிப்பதில்லை, இந்து மதத்திற்கு எதிராக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் செயல்படுகின்றனர். இந்து தர்மத்தை அழிப்பது மட்டுமே இந்தியா கூட்டணி நோக்கமாக உள்ளது, சக்தியை […]

Continue reading …

நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக கடும் விமர்சனம்!

Comments Off on நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக கடும் விமர்சனம்!

நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசினார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் “420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என […]

Continue reading …