
“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். படத்தின் கதைக்களம் நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் திஷா படானி மற்றும் பாபி தியோல் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தில் தன்னுடையக் காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி […]
Continue reading …
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி ராணி (50). கணவன் மனைவி இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் தங்களது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக திருப்பத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் ராணி பலத்த காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் […]
Continue reading …
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட நடிகை ஜோதிகா, பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார். பின்னர் “36 வயதினிலே” படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்தவர் பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக “காதல்” திரைப்படத்தில் நடித்தார். அப்படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. பாலிவுட்டில் “ஷைத்தான்” படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோரோடு இணைந்து நடித்தார். இப்படத்தை சூப்பர் 30 படத்தை இயக்கிய விகாஸ் பால் இயக்கினார். […]
Continue reading …
காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், “வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தையை கடத்துவதற்காக நுழைந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்துள்ளது முழுக்க முழுக்க வதந்தி. இது குரல் பதிவுகளாக பரவி வருகிறது. கோவை மாவட்ட காவல்துறை சார்பில் இதனை 100% முழுக்க முழுக்க வதந்தி என கூற முடியும். இதை யாரும் நம்ப வேண்டாம். கூறியதுடன் வட மாநிலத்திலிருந்து கோவையில் நிறைய பேர் தொழில் […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் வருகையை அறிவித்திருந்தார். அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்துக்குப் பிறகு அவர் இன்னும் ஒரே ஒரு படம் மட்டுமே நடிப்பேன் என்றும் அதன் பின்னர் முழுக்க முழுகக் பொதுவாழ்வில் இறங்கப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் ஒரு படத்துக்கு சம்பளமாக பெறும் விஜய், திடீரென சினிமாவில் இருந்து விலகுவதாக எடுத்துள்ள இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக […]
Continue reading …
இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கைது செய்து வருகிறது. இந்த தொடர் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர் சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய மாநில அரசுகளும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நிற்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் […]
Continue reading …
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் வழங்கிய நிறுவனங்களில் அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை செய்ததுடன், இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்த விவரங்களை சமர்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வகையில் எஸ்பிஐ அளித்த விவரங்கள் தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிகளவில் தேர்தல் நன்கொடை பெற்ற […]
Continue reading …
சிறுமியை வன்கொடுமை செய்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். இவரது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றுள்ளார். அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்தால் […]
Continue reading …
மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் இரண்டாம் கட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் ஒரு ஆண்டுக்கு சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி “சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை திரு.வி.க சந்திப்பு வரை […]
Continue reading …
நடிகர் ஆரி அர்ஜுனன், தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். நடிகர் ஆரி அர்ஜுனன் இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகிறார். தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். […]
Continue reading …