தேனி மாவட்டம் போலி செய்தியை சமுக வலைதலங்களில் பரப்பிய தங்க தமிழ் செல்வன் மகன் நிஷாந்த் மீது புகார் . தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி குறித்து பாலிமர் நியூஸ்,தந்தி டிவி,நியூஸ் தமிழ் டிவி,நியூஸ்7 டிவி ஆகியவற்றின் லோகோவை பயன்படுத்தி போலியாக வீடியோ மற்றும் போட்டோக்களுடன் கூடிய கார்டுகளை பயன்படுத்தி போலி செய்திகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பிய திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளராக அவர் […]
Continue reading …வேண்டாம் மோடி…! வேண்டாம் மோடி…..! தேனி பொது கூட்டதில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு. தேனி லட்சுமிபுரம் அருகே திமுக சார்பில் நாடாளுமன்ற தொகுதியான தேனி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதற்காக தேனி அருகே உள்ள லட்சுமிபுரத்தில் […]
Continue reading …வாகன சோதனையில் மாட்டிய ஜி.கே.வாசன் வாகனம். அத்தனை வாகனங்களை சோதனை செய்யுங்கள் உத்தரவிட்ட வாசன். இன்று தூத்துகுடி தேர்தல் பரப்புரையின் போது தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கார் சோதனை செய்யபட்டது… உடனே ஜி.கே.வாசன் தன் பின் வந்த வண்டிகள் அனைத்தையும் நிப்பாட்டி அனைத்து வண்டிகளையும் முழுமையாக சோதனை செய்துவிடுங்கள் என கனிவாக கூறி சோதனை முடித்ததும் தேர்தல் அதிகாரிகளிடம் தரவா செக் பண்ணீட்டீங்களா நாங்க கிளம்பலாமா என்று […]
Continue reading …மதுரை திருமங்கலம்- விருதுநகர் 4 வழிச்சாலையில் விபத்து. ஆறு பேர் பலி என தகவல். மதுரை திருமங்கலம் – விருதுநகர் 4 வழிச்சாலையில் இன்று காலை நடந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பழ வியாபாரி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், மூவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவ்விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி […]
Continue reading …வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த வித்தியாசமான விவசாய சங்க வேட்பாளர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் கோ.கண்ணன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் இன்று கோவில்பட்டி நகர் பகுதியில் பொதுமக்கள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு தரப்பினரிடமும் தனது சின்னமான டில்லர் கலப்பைக்கு வாக்கு சேகரித்தார். தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் வேட்பாளர் கோ.கண்ணன் தனது தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரத்துடன் வெற்றிலை பாக்கு வைத்து விவசாயிக்கு […]
Continue reading …தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க, காவிரி, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவேன்.திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோ உறுதி. இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுவரும் துரைவைகோ திருச்சி ரெட்டைவாய்க்கால் பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து ராம்ஜிநகர், கே.கள்ளிக்குடி, புங்கனூர், நவலூர்குட்டப்பட்டு, அரியாவூர், சத்திரப்பட்டி பஸ்நிலையம், அம்மா பேட்டை, இனாம்குளத்தூர், கோமங்கலம், ஆலம்பட்டிபுதூர் […]
Continue reading …ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் விதமாக இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று தேனியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சுமார் […]
Continue reading …திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தக சங்க வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காய பேட்டையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் கை பார்த்தல் (தரம் பிரித்தல்) வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகிகள் கூறியதால் பெண்கள் ஆர்ப்பாட்டம் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் ஆர்ப்பாட்டம்
Continue reading …ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ₹2 கோடிக்கு ஆடுகள் விற்பனை! தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன.
Continue reading …தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ம சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மனைவி மனைவி ரமணி. இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இந்த நிலையில் இன்று காலை கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவினரான சேர்மதாய் ஆகிய மூவரும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ரவீந்திரன் ஒட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கார் வந்த போது திடீரென நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் […]
Continue reading …