வேகத்தடுப்பில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் பிரியா இன்று உயிரிழப்பு. திருச்சி தனியார் மருத்துவமனையில் 7ம் தேதி புதுக்கோட்டை பழைய மருத்துவமனை கார்னரில் உள்ள வேகத்தடை மீது கணவருடன் டூவீலரில் பயணித்த போது விபத்தில் சிக்கி காவல் ஆய்வாளர் பிரியா வயது 45 நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார் இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனளிக்காமல் இன்று […]
Continue reading …கிளி சோதிடர் கைது: முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அன்புமணி ராமதாஸ் காட்டம். கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக […]
Continue reading …வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி..? தாம்பரம் ரயில் நிலையத்தில், ஆவணங்களின்றி கொண்டுச் செல்லப்பட்ட சுமார் ₹4 கோடி ரொக்கம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்! நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தகவல். போலீஸ் விசாரணையின்போது, பணத்தை கொண்டு சென்ற 3 பேர் முன்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!
Continue reading …பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம். பெரம்பலூர் எம்.பி தொகுதி தி.மு.க.வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ. கனரா பேங்க் அருகில் திறந்த வேனில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது: 9 இலட்சத்து 75ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் மூலம் 30இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, 2 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட் மின்சாரம் வழங்கியது,மாதம் ரூ.1000. […]
Continue reading …வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் காவிரி குடிநீர் திட்டம். பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி. கோரையாறு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா தலம் அமைக்கப்படும். வேப்பந்தட்டை பகுதியில் அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இன்றி காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் உறுதி அளித்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் என்.டி .சந்திரமோகன் அரசலூர், அன்னமங்கலம், விஸ்வகுடி,தொண்டமான் துறை, கோரையாறு,மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்னு […]
Continue reading …பெங்களூருவை அடுத்த மத்துரம்மா கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையின் போது 120 அடி உயர தேர் சாய்ந்து விபத்து; தேரை வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து; தேர் சாய்வதை பார்த்து பக்தர்கள் உடனடியாக ஓடியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு.
Continue reading …லஞ்சம் வாங்கிய VAO கைது…! சிட்டாவில் பெயர் சேர்க்க விவசாயி ஒருவரிடம் ₹.6 – ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நீலகிரி மாவட்டம் தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலர் கற்பகம், அவரது டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் கைது.
Continue reading …விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ப மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது மேடையிலேயே மயங்கி விழுந்தார். விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் […]
Continue reading …விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.எல்.ஏ. புகழேந்தி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருந்ததாக சொல்லப்படுகிறது.
Continue reading …*கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: போலீசார் விசாரணை* கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். ஏடிஎம்-ல் இருந்து சுமார் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Continue reading …