25 சிலிண்டர், ரூ. 1 லட்சத்து பத்தாயிரம் திருடிய ஓட்டுநர் கைது. மதுரை மாவட்டம் திருப்பாலையில், கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார் ரமேஷ். சத்திரப்பட்டியைச் சேர்ந்த சக்தி முருகன் என்பவர் கேஸ் ஏஜென்சியில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கலெக்சன் தொகையான 1 லட்சத்து 10 ஆயிரத்தை கையாடல் செய்த சக்தி முருகன், 25 சிலிண்டர்களையும் திருடி விற்றுள்ளார். இது குறித்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ஓட்டுநர் சக்தி முருகனை திருப்பாலை போலீசார் நேற்று […]
Continue reading …குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழப்பு. டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்தில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் விசாரணையில் முதற்கட்ட […]
Continue reading …காவல்துறை – போக்குவரத்து துறை இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. நாங்குநேரியில் அரசு பேருந்தில் காவலர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்ட நடத்துனரும், காவலரும் நேரில் சந்தித்து சமாதானம். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, சமாதானம் பேசி கை குலுக்கி கொண்டனர்.
Continue reading …22வது பிறந்தநாளை பக்தர்களுடன் கொண்டாடிய திருவானைக்கோவில் யானை அகிலா. பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வருவதுடன் கோவில் யானை அகிலா செய்யும் சேட்டைகளை ரசிக்கவும் வருகிறார்கள். யானை அகிலா 2002 ஆம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு தனியார் டிரஸ்ட் சார்பில் திருவானைக்காவல் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இக்கோவிலில் யானை அகிலா கடந்த 12 வருடங்களாக […]
Continue reading …தென்மேற்கு பருவமழை தீவிரம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த அருவியில் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து அதிக கன மழை பெய்து வருவதால் சுருளி அருவி நீர் பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, […]
Continue reading …95 பவுன் நகையை ஆட்டையை போட்ட திருமங்கலம் பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர். அதிரடியாக பணியிடம் நீக்கம் செய்த டி.ஐ.ஜி ரம்யாபாரதி. மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). அதேபோல் திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினயா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடத்துக்க்குள்ளே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது சம்பந்தமான விசாரணை திருமங்கலம் அனைத்து […]
Continue reading …வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ. 14 பேர் உடல் கருகி சாவு. வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தநிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவென அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து […]
Continue reading …தேனியில் கஞ்சா விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் மெயின்ரோடு டாஸ்மாக் கடை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கண்டமனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்கேத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.அதில் […]
Continue reading …ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி ஸ்வாதி மாலிவால் டெல்லியில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் பேசிய ஸ்வாதி மாலிவால், “இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய நாள். அனைவருக்கும், குறிப்பாக பெண்கள் வெளியே வந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவில், அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.” எனத் தெரிவித்துள்ளார்.
Continue reading …OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்; மேல் முறையீடு செய்வதாக மமதா பானர்ஜி உறுதி. முஸ்லிம்களுக்கு OBC அந்தஸ்து வழங்க காரணம் வாக்கு வங்கிதான் என நீதிமன்றம் கூறியிருந்தது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதாக மமதா அறிவித்துள்ளார்
Continue reading …