Home » Archives by category » அரசியல் (Page 10)

தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

Comments Off on தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தாத கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-ஆவது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டில்லியில் ஜூன் 25ம் தேதி நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் தரப்பில், “தற்போது மேட்டூர் அணையில் 12.490 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் […]

Continue reading …

அமைச்சர் முத்துச்சாமி பேட்டி!

Comments Off on அமைச்சர் முத்துச்சாமி பேட்டி!

அமைச்சர் முத்துச்சாமி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம், “கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு […]

Continue reading …

ள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

Comments Off on ள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

11 வட்டாட்சியர்கள் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், வானபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 66 பேர் உயிரிழந்தனர். சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் […]

Continue reading …

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி!

Comments Off on விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி உறுதி!

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதால் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் […]

Continue reading …

திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

Comments Off on திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுங்கட்சியின் அதிகாரப் பசிக்கு, தமிழகக் காவல்துறையை இரையாக்கும் போக்கை, திமுக இனியாவது கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே மூன்று வயதான தாய்மார்கள் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் 70 வயதான திருமதி. முத்துலட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் […]

Continue reading …

காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா; அன்புமணி ராமதாஸ்!

Comments Off on காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா; அன்புமணி ராமதாஸ்!

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய வசதியாக தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் ஒரு டி.எம்.சி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை, நல்ல மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில் 90 நாட்களுக்கு மேல் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில் அவர் ஜாமினில் வெளியே வருவதற்கும் விசாரணை […]

Continue reading …

பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Comments Off on பிரேமலதாவுக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதாவிற்கு அரசு நிர்வாகமும், அரசியலும் தெரியவில்லை என்றும் அரசு திட்டங்களை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.19 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை […]

Continue reading …

ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்!

Comments Off on ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன்!

டில்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி டில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் […]

Continue reading …

13 மீனவர்கள் கைது குறித்து டிடிவி தினகரன்!

Comments Off on 13 மீனவர்கள் கைது குறித்து டிடிவி தினகரன்!

இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுங்கள் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த இரு வாரங்களில் மட்டும் […]

Continue reading …