Home » Archives by category » அரசியல் (Page 163)

ஈபிஎஸ்-ன் அறிக்கை!

Comments Off on ஈபிஎஸ்-ன் அறிக்கை!

முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி “தர்மம், நீதி வென்றது. உடனிருந்தே கொல்லும் வியாதி ஒழிந்தது” என்று அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டள்ள அறிக்கையில், “உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நம்மையெல்லாம் வாழவைத்த இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களையும், தீய சக்தி, விடியா திமுக அரசின் அராஜகத்தில் இருந்து […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து!

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் “பாஜகவுக்கு மாற்று நாங்கள்தான்” என்று கூறியுள்ளார். பாஜக கட்சி கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்தது. 2019ம் ஆண்டும் தொடர்ச்சியாக இரண்டாம் முறையும் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தெரிவிக்கின்றனர். ஆனாலும், நாட்டிலுள்ள பல மாநிலங்களில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கிறது. பாஜகவுக்கு அடிபணியாதவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை விட்டு […]

Continue reading …

பாண்டிச்சேரி சபாநாயகர் வருத்தம்!

Comments Off on பாண்டிச்சேரி சபாநாயகர் வருத்தம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என பாண்டிச்சேரி சபாநாயகர் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திருப்பூர் மாநகர் முழுவதும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 5000 பேருக்கான அன்னதானத்தையும் தொடங்கி வைத்து பாண்டிச்சேரி சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்தவர், “இந்து முன்னணி சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாக […]

Continue reading …

விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்!

Comments Off on விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்!

திமுக தேர்தலின் போது அறிவித்த குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டத்தை நிதிநிலைமையை சரிசெய்த பிறகு இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் நேரத்தில் கட்சியின் சார்பில் வெளியிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான் அவர்கள் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது என்று கூறலாம். அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு […]

Continue reading …

‘ஆபரேஷன் சவுத்’

Comments Off on ‘ஆபரேஷன் சவுத்’

இன்று பிரதமர் நரேந்திர மோடி பல ஆயிரம் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க கேரளாவுக்கு வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, முதலில் கேரளாவுக்கு இன்று மாலை பிரதமர் மோடி வருகிறார். கொச்சி விமான நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு வந்தடையும் பிரதமர் நரேந்திர மோடி, 6 மணிக்கு ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான கல்லடி கிராமத்துக்கு சென்று ஆதி சங்கர ஜென்மபூமியை பார்வையிடுகிறார். ரூ,1,950 கோடி […]

Continue reading …

மூத்த தலைவர்களின் திடீர் செல்பி!

Comments Off on மூத்த தலைவர்களின் திடீர் செல்பி!

எதிர் எதிர் துருவங்களான கார்த்தி சிதம்பரம் மற்றும் அண்ணாமலையும் திடீரென சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்பியான கார்த்தி சிதம்பரமும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தேசிய அரசியல் முதல் மாநில அரசியல் வரை எதிர் கட்சியாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இருகட்சி தலைவர்களும் சந்தித்துக் கொள்கிறார்கள். தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் எம்பியாக […]

Continue reading …

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கண்டனம்!

Comments Off on மக்கள் நீதி மய்யம் கட்சியின் கண்டனம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கண்டனம்!

நாங்குநேரி அரசுப் பள்ளியில் மாணவிகள் துப்புரவு பணியில் ஈடுபட்டதை உதாரணமாக கூறி மக்கள் நீதி மய்யம் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தினமும் மாணவிகள் 4 பேர் வகுப்பறைகளை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பரவியது. இச்செயலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை துப்புரவுப் […]

Continue reading …

சீமானின் வலியுறுத்தல்!

Comments Off on சீமானின் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க முறையான சட்டம் தேவையென வலியுறுத்தி உள்ளார். தனியார் பள்ளியில் படித்த 4 வயது குழந்தை பள்ளி தாளாளரின் கணவர் காமராஜால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரைப் போன்றவர்கள் ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கு. கணவனின் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க […]

Continue reading …

எடப்பாடியாருக்கு ஏற்பட்ட நெருக்கடி!

Comments Off on எடப்பாடியாருக்கு ஏற்பட்ட நெருக்கடி!

அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமைப் பிரச்னையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ் சுக்கு சாதாகமாக இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது ஓபிஎஸ் பக்கம் தாவ தொடங்கியுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு 6 எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ்ஸும் நிறைய எம்எல்ஏக்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறினார். 25 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தரவிருப்பதாக கோவை செல்வராஜ் புதிதாக ஒரு தகவலை கூறியுள்ளார். அவர் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமியை மக்களிடம் அறிமுகப்படுத்தியது […]

Continue reading …

தேசிய கொடிக்கு பதில் காவி கொடி சர்ச்சை!

Comments Off on தேசிய கொடிக்கு பதில் காவி கொடி சர்ச்சை!

மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள புகைப்படத்தில் பாரதமாதாவின் கையில் தேசிய கொடிக்கு பதிலாக காவிகொடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் தமிழகம் முழுதும் வேல் யாத்திரை மூலமாக பிரபலமானவர். இவரது தலைமையில்தான் பாஜக 2021 தேர்தலை எதிர்கொண்டது. அதிமுகவுடன் கூட்டணி வைத்து 4 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. பின்னர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக நடவடிக்கைகளில் இருந்து அவர் கொஞ்சம் ஒதுங்கியே […]

Continue reading …