கடந்த 2018ம் ஆண்டு நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராகப் பதவியேற்றார் இம்ரான் கான். கடந்த ஏப்ரல் 10ம் தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசு தோல்வியுற்றது. எனவே புதிய பிரதமராக முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இம்ரான் கான் ஆட்சிக் காலத்தில், வெளிநாட்டில் அவருக்கு ரூ.18 கோடி மதிப்புள்ள நெக்லஸ் அளிக்கப்பட்டதாகவும், அதைத் தன் உதவியாளர் மூலம் ரூ.18 கோடிக்கு நகைக் கடையில் விற்கப்பட்டதாகவும் புகார் […]
Continue reading …முதல் முறை அதிமுக கட்சியின் முதல் எம்.பியும், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவருமான மாயத்தேவர் இன்று காலமானார். கடந்த 1972ம் ஆண்டில் திராவிட முன்னேற்ற கட்சியில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டப்பின் தனியாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கி சில நாட்களிலேயே திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்ததால் அப்பகுதியில் எம்.பி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. அச்சமயம் திமுகவை வெல்ல நினைத்த அதிமுக […]
Continue reading …பதவி விலகிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் முதல்வரானார் நிதிஸ்குமார். இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் அரசியலில் பாஜக -மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளிடையே நீண்ட காலமாக மோதல் இருந்தது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் நிதிஸ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். பீகார் மாநிலத்தில், முதலமைச்சர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜன தா தளம், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. நிதிஸ்குமாருக்கும் பாஜகவுக்குமிடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள் […]
Continue reading …சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து அரசியல் பற்றி பேசியதாக கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்தாண்டு வரை அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்த நிலையில், உடல் நலக்குறைவை அடுத்து, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் தன் ரசிகர்கள் விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளில் சேரலாம் எனவும் தெரிவித்தார். சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக டில்லி […]
Continue reading …புதிய நீதிபதி அதிமுக பொதுக்குழுவின் வழக்கை விசாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீதிபதி கிருஷ்ணசாமி அவர்கள் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்த நிலையில் அவ்வழக்கில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. இவ்வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டுமென்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிபதி விலகி விட்டார். தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் […]
Continue reading …ஓபிஎஸ் தரப்பில் நீதிபதியிடன் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதியிடம் மாற்ற வேண்டும் என தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஓபிஎஸ் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைமை நீதிபதிக்கும் அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெறுங்கள் என நீதிபதி கிருஷ்ணன் ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்த இதையடுத்து ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டு அந்த மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் […]
Continue reading …காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலுமில்லை என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களாக அவருடைய விமர்சனம் கடும் தாக்குதலாக உள்ளது. இந்நிலையில் இன்று அவருடைய விமர்சனம் மத்திய நிதியமைச்சர் மீது திரும்பியுள்ளது. இதுபற்றி அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய பொருளாதாரம் பற்றி எந்த புரிதலுமில்லை. […]
Continue reading …பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் 5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஏழு நாட்களாக நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்தது என மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்களும் கலந்து கொண்டது. இதில் அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்ததாக கூறப்பட்டது. கடந்த 7 நாட்களில் நடந்த சுற்றுகளில் ஒரு […]
Continue reading …இன்று டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி கலந்து கொள்கிறார். பாஜக அரசு மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் விமர்சனம் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அனைத்திந்திய நியாய விலைக்கடை உரிமையாளர்கள் சார்பில் இன்று டில்லியில், அரிகி, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவற்றிற்கான இழப்பீடு வழங்குவது குறித்த 9 கோரிக்கைகளை வலியுறித்தி, டில்லியில் உள்ள ஜல் மந்தரின் போராட்டம் […]
Continue reading …மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக போட்டியிடுபவர் பற்றிய தகவலை கூறியுள்ளார். பாஜக பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது மழைக்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் குரல் கொடுத்து வருகிறது. வரும் 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார். பாஜகவில் 70 வயதிற்கு மேற்பட்ட […]
Continue reading …